Header Ads



A/L பரீட்சை எழுதும் மாணவியை, துஷ்பிரயோகம் செய்த இளம் அரசியல்வாதி

உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முல்லைத்தீவு உடையார் கட்டு மகா வித்தியாலத்தில் உயர்தர பரீட்சை எழுதி வரும் லூத்மாத கோவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவியையே இவ்வாறு பளையினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். 

கடந்த 20 ஆம் திகதி பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஊர்தி ஒன்றில் கடத்தி சென்று பளைப்பகுதியில் தென்னந்தோட்டம் ஒன்றில் வைத்து விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு 21 ஆம் திகதி உடையார் கட்டுப் பகுதியில் கொண்டுவந்து இறக்கிவிட்டுள்ளார்கள். 

இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையினை தொடர்ந்து, புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் பளைப்பகுதிக்கு சென்று மாணவி கடத்தலுக்கு உதவிய நபர் ஒருவரை 21 ஆம் திகதி பிற்பகல் கைது செய்துள்ளார்கள். 

இதனை தொடர்ந்து 21 ஆம் திகதி இரவு பளைப்பகுதிக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த மாணவியை கடத்தி விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்துள்ளனர். 

பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கடத்தலுக்கு உதவிய இளைஞனை நேற்று (22) பதில் நீதவான் நீதிமன்றில் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை இன்று (23) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். 

இதன்போது குறித்த நபரை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

குறித்த பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

(நிருபர் தவசீலன்)

1 comment:

  1. இச்சம்பவத்தை ஒரு காலத்தில் குரோதம் கொண்டவர்கள் கூறுவார்கள் முஸ்லிம்கள் தமிழ் பெண்களை கற்பழித்தார்கள், காட்டிக்கொடுத்தார்கள். அவர்களுடைய இனத்தில் உள்ளவர்களே காட்டிக்கொடுத்துவிட்டு, சண்டை பிடித்து பிரிந்துவிட்டு(தெரு நாய்ச்சண்டை(வட-கிழக்கு)), கற்பழித்துவிட்டு அதை முஸ்லிம்களின் தலையில் போடுவது தமிழ் தெரிந்த ஒரே காரணத்துக்கா வேண்டி.(தேனை அவன் நக்கிட்டு, கையை முஸ்லிம்களின் தலையில் தடவிவிட்டு போற கேடு கேட்ட பழக்கம்)

    ReplyDelete

Powered by Blogger.