Header Ads



பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்த பிக்கு - 114 ஆண்டுகள் சிறை..!

புத்த பிக்கு ஒருவருக்கு 114 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. 

தாய்லாந்தை சேர்ந்த வைராபான் சுக்பான் என்ற முன்னாள் புத்த பிக்கு, ஒரு பெண்ணை துஸ்பிரயோகம் செய்து விட்டு அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார்.

இந்நிலையில் இதுகுறித்த விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவற்துறையினர் வைராபால், ஏகப்பட்ட பண மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.

பல நன்கொடையாளர்களிடம் புத்தருக்கு மரகத சிலை செய்வதற்காக சுமார் 12 கோடி ரூபாய் பெற்றுவிட்டு அவர்களை ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வைராபானை நாடு கடத்திய தாய்லாந்து அரசு அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது. 

இதன்போது , அவருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.