Header Ads



மகிந்தவின் பெயரில், சுடுகாடு மட்டுமே இல்லை


கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் மகிந்த ராஜபக்ச என்றே இடப்பட்டதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் மகிந்த ராஜபக்சவின் பெயரே சூட்டப்பட்டது.

தாமரை தடாகம் அதற்கும் மகிந்த ராஜபக்சவின் பெயர். விளையாட்டு மைதானம் ஒன்றை நிர்மாணித்தால் அதற்கும் மகிந்த ராஜபக்ச என்றே பெயர் சூட்டப்பட்டது.

காலி மைதானத்தின் பெவிலியனை நிர்மாணித்து அதற்கும் மகிந்த ராஜபக்ச என பெயரிட்டனர். மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றுக்கும் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டன.

மகிந்த ராஜபக்ச என்ற பெயரில் சர்வதேச மயானம் என்ற ஒன்று மட்டுமே இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கம் உதாவ என்ற வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து லட்சக்கணக்கான வீடுகளை நிர்மாணித்து கொடுத்தார்.

எனினும் அவை எவற்றுக்கும் அவர் தனது பெயரை சூட்டிக்கொள்ளவில்லை. மாளிகாவத்தையில் 100 அடி வீதிக்கு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பெயரை சூட்டு வேண்டும் என்று பரிந்துரைத்த போது, அவர் அதனையும் நிகராகரித்தார். இப்படியான தலைவர்களும் இந்த நாட்டில் இருந்தனர்.

எனினும் கடனை வாங்கி, அபிவிருத்தித் திட்டங்களை செய்து அவற்றுக்கு தனது பெயரை சூட்டிக்கொண்ட ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

Powered by Blogger.