Header Ads



முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் அரசியல்வாதிகளையும் மீண்டும் சாடுகிறார் பைஸர்

முனாபிக் அர­சியல் செய்ய நான் விரும்­ப­வில்லை. ஏனைய முஸ்லிம் அமைச்­சர்­களும் முனாபிக் அர­சி­யலை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாகாண சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழே நடத்­தப்­படும். அதில் எந்­த­வித மாற்­றங்­க­ளு­மில்லை.

மாகாண சபை திருத்தச் சட்­டத்­திற்கு கையு­யர்த்தி வாக்­க­ளித்­த­வர்­களே, புதிய தேர்தல் முறையை ஆத­ரித்­த­வர்­களே அதை எதிர்க்­கின்­றனர். அமைச்­சர்கள் ரவூப் ஹக்­கீமும், ரிசாதும் அன்று ஆத­ரித்­து­விட்டு இன்று புதிய தேர்தல் முறையை எதிர்ப்­பது ஏன்?

மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ண­யத்தில் முஸ்லிம் சமூ­கத்­துக்­குள்ள அநீ­தி­களை பாரா­ளு­மன்றக் குழு மூலம் தீர்த்துக் கொள்­ளலாம் என மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார்.

நேற்று மாலை விளை­யாட்­டுத்­துறை அமைச்சில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில் தெரி­வித்­த­தா­வது;

புதிய தேர்தல் முறைக்கு அமைச்­சர்கள் ரிசாத் பதி­யு­தீனும், ரவூப் ஹக்­கீமும் எதிர்ப்புத் தெரி­விப்­ப­தென்றால் ஏன் அவர்கள் புதிய தேர்தல் முறையை ஆத­ரித்து கையு­யர்த்தி வாக்­க­ளித்­தார்கள்?

இப்­போது இந்தத் தேர்தல் முறை முஸ்லிம் சமூ­கத்­துக்குப் பாதிப்­பா­னது. மீண்டும் விருப்பு வாக்கு தேர்தல் முறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறு­கி­றார்கள்.

சிறு­பான்மைக் கட்­சிகள் தமது சமூ­கத்தை விற்று, பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுடன் இணைந்து விருப்பு வாக்­கு­களைப் பழைய தேர்தல் முறை மூலம் பெற்­றுக்­கொள்­கின்­றன. புதிய தேர்தல் முறை மூலம் முஸ்லிம் கட்­சிகள் தனித்துப் போட்­டி­யிட்டு முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். அவர்கள் பெற்­றுக்­கொள்ளும் வாக்­கு­க­ளுக்கு அமைய ஆச­னங்­களும் கிடைக்கும். முஸ்லிம் கட்­சிகள் தேசிய பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுடன் புட்­போட்டில் ஏறிப் பய­ணிப்­ப­தென்றால் பிரச்­சினை உள்­ளது.

பழைய தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம் சமூ­கத்தை விற்று, வாக்­கு­களைப் பெற்று தமது விருப்பு வாக்­கு­களை அதி­க­ரித்துக் கொண்­டார்கள். இவ்­வா­றான தேர்தல் முறைமை நாட்­டுக்குப் பய­னுள்­ள­தல்ல. முஸ்லிம் காங்­கிரஸ் தனித்துப் போட்­டி­யிட்டு அவர்­க­ளுக்குக் கிடைக்கும் வாக்­கு­க­ளுக்கு ஏற்ப ஆச­னங்­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். இந்த விப­ரங்கள் மக்­க­ளுக்குத் தெரி­யாது.

நான் சவால் விடு­கிறேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸோ, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸோ தனித்துப் போட்­டி­யிட்டு அவர்­க­ளுக்குக் கிடைக்கும் வாக்­கு­க­ளுக்கு ஏற்ற ஆச­னங்கள் கிடைக்­கா­விட்டால் தான் புதிய தேர்தல் முறைமை தவ­றா­ன­தாகும். ஆனால் அவர்கள் தேசிய கட்­சி­க­ளுடன் இணைந்து வாக்­கு­களைப் பெற்று விருப்­பு­வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொள்­வதே அவர்­க­ளது எதிர்­பார்ப்­பாக இருக்­கி­றது.

உதா­ர­ண­மாக 2010 ஆம் ஆண்டு கண்டி மாவட்­டத்தில் ஐ.தே. கட்­சியில் போட்­டி­யிட்­ட­வர்­களில் 4 பேர் வெற்­றி­பெற்­றனர். அவர்­களில் மூவர் முஸ்­லிம்கள், ஒரு­வரே சிங்­க­ளவர். விருப்பு வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக சிறு­பான்மைக் கட்­சிகள் பெரும்­பான்மை தேசியக் கட்­சி­களில் புட் போட்டில் ஏறிக்­கொள்­வது இங்கு தெளி­வா­கி­றது.

புதிய முறையின் கீழ் இந்த வேலையைச் செய்ய முடி­யாது. இது நாட்­டுக்கு உகந்­த­தல்ல. மிகவும் ஊழல் நிறைந்த தேர்தல் முறை­மையே விருப்பு வாக்கு முறை­யாகும். இது நாட்­டுக்கு உகந்­த­தல்ல.

முஸ்­லிம்கள் நாட்டில் பரந்து வாழ்­கி­றார்கள். முஸ்லிம் காங்­கிரஸ் புதிய முறை­மையின் கீழ் தனித்துப் போட்­டி­யிட்டு கிடைக்கும் வாக்­கு­க­ளுக்கு அமை­வாக ஆச­னங்­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.

மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ண­யத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு சில குறை­பா­டுகள் உள்­ளன. பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. இதனை நான் ஏற்­றுக்­கொள்­கிறேன். இதற்­காக ஊழல் நிறைந்த விருப்பு வாக்கு முறைமைத் தேர்­த­லுக்குச் செல்ல முடி­யாது.

நான் நிய­மித்த மாகாண சபை தொகுதி எல்லை நிர்­ணயக் குழு­வுக்கு ஒரு கோரிக்கை விடுத்­தி­ருந்தேன். எல்லை நிர்­ணயம் அர­சியல் கட்­சி­க­ளையும் ஆலோ­சித்தே மேற்­கொள்­ளும்­படி வேண்­டி­யி­ருந்தேன். ஆனால் அவர்கள் அவ்­வாறு கலந்­தா­லோ­சிக்­க­வில்லை. ஆலோ­சித்­தி­ருந்தால் இந்தக் குறை­பா­டுகள் ஏற்­பட்­டி­ருக்­காது.

மாகாண சபை தொகுதி எல்லை நிர்­ண­யத்தில் உள்ள குறை­பா­டு­களை பாரா­ளு­மன்றக்குழு ஒன்­றினை நிய­மித்துத் தீர்த்­துக்­கொள்ள முடியும். ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் விருப்பு வாக்கு முறை­மையை இல்­லா­தொ­ழிப்­ப­தாகக் கூறியே பத­விக்கு வந்­தார்கள்.

கிழக்கு மாகா­ணத்தில் தேர்தல் காலத்தில் தீப்­பெட்­டிக்குள் 5 ஆயிரம் ரூபாய் நாண­யத்­தாளை வைத்து பகிர்ந்­த­ளித்­த­வர்­களே இன்று மீண்டும் விருப்பு வாக்கு முறைமைத் தேர்­தலைக் கோரு­கி­றார்கள். இது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான முஸ்லிம் கட்­சி­களே புதிய தேர்தல் முறையை எதிர்க்­கின்­றன. கிழக்கு மாகா­ணத்தில் தேர்தல் காலத்தில் பணம் பகிர்ந்­த­ளித்­தார்கள், முச்­சக்­கர வண்டி டயர்­களும் பகிர்ந்­த­ளித்­தார்கள். இது மோச­மான அர­சியல்.

சாய்ந்­த­ம­ருது, பிர­தேச சபை விவ­காரம் தொடர்பில் ரவூப் ஹக்­கீ­மையும், ரிசாத் பதி­யு­தீ­னையும் ஒன்­று­ப­டு­மாறும் நான் கசெட் பண்­ணு­வ­தா­கவும் கூறினேன். ஆனால் அவர்கள் ஒற்­று­மைப்­ப­ட­வில்லை. இது துரோ­க­மாகும்.

வெட்­க­மில்­லாமல் பாரா­ளு­மன்­றத்தில் கையு­யர்த்­தி­ய­வர்­களே விருப்பு வாக்கு தேர்தல் முறை­மையைக் கோரு­கி­றார்கள். இவர்கள் வாக்­க­ளித்­தி­ருக்­கா­விட்டால் 2/3 பெரும்­பான்மை கிடைத்­தி­ருக்­கா­தல்­லவா? அதனால், என்னால் பழைய முறை­மைக்குச் செல்ல முடி­யாது. 50 க்கு 50 கோரி­ய­வர்கள் அவர்கள். எல்லை நிர்­ணய அறிக்­கையை விவா­திக்க கோரி­ய­வர்கள் இவர்கள்.

எல்லை நிர்­ண­யத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டி­ருந்தால் பாரா­ளு­மன்ற குழு ஒன்றின் மூலம் அதில் திருத்­தங்­களைச் செய்து கொள்­ளலாம். கூக்­கு­ர­லிடும் அமைச்­சர்­க­ளிடம் நான் ஒன்று கேட்­கிறேன். தேசிய கட்சியில் புட்போட்டில் சென்று பிரதிநிதித்துவம் பெறுவது சரியானதா?

என்னால் முனாபிக் அரசியல் செய்ய முடியாது. ஏனைய முஸ்லிம் கட்சிகளையும் முனாபிக் அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறுகிறேன்.

பேருவளை, கிரேண்ட்பாஸ், கிந்தோட்டை சம்பவங்களின்போது நானே முன் நின்றேன். ஆனால் சமூகத்தை விற்று நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. புதிய முறையில் விகிதாசாரத்தின் படியே ஆசனங்கள் பகிரப்படும். மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

7 comments:

  1. பைசர் முஸ்தபா உம்மால் முடியுமாயின் அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு சென்று செய்தியாளர் மாநாடுகளை நடத்தி உமது கெட்டித்தனத்தை காட்டு பார்ப்போம்.

    ReplyDelete
  2. புதிய தேர்தல் முறைக்கு, முஸ்லீம் அரசியல்வாதிகள் விரும்பி வாக்களிக்கவில்லை.

    முஸ்லீம் அரசியல்வாதிகள் மிரட்டப்பட்டு, அச்சுறுத்தப்பட்டனர்.

    அதன் பிற்பாடே, அவர்கள் பயந்து வாக்களித்தார்கள்.

    அதாவது, வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

    ஆக, பழைய தேர்தல் முறைக்கு ஏற்ப தேர்தல் நடத்த வேண்டும் என்று முஸ்லீம் அரசியல்வாதிகள் கோருவது நியாயமானது.

    ReplyDelete
  3. Well said Mr Musthafa. Future elections must be according to the new election system. No change.

    ReplyDelete
  4. @sampanthan tna, ரணில்/மைதிரி கட்டளை இட்டால் ஏன் எதற்கு என்று கேட்காமல் அதை செய்வதற்காக தான் முஸ்லிம் தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகள் கொடுக்கபட்டன.

    அடிமைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி கையை உயர்த்தினார்கள்.
    இதை தான் சொல்லுவது win-win deal.
    அரசாங்கத்திற்கும், சிங்களவர்களுக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும் Win, ஆனால் முஸ்லிம் மக்கள் losers

    ReplyDelete
  5. @sampanthan tna, உங்கள் கருத்து 100% உண்மை.

    (1) முஸ்லிம் MPகள் புதிய தேர்தல் முறைக்கு விரும்பி வாக்களிக்க வில்லை என்பது உண்மை. அவர்களுக்கு இதன் பாதகங்கள் பற்றி சில அமைப்பு எச்சரித்து இருந்தார்கள். தவிர, றஹிம், றிசாத் ஆகியோரின் தனிப்பட்ட சட்ட ஆலோசனைகளும் பெற்று இதன் பாதங்களை உறுதி செய்திருந்தார்கள். எனவே இதற்கு ஆதரவளிக்க முதலில் மறுத்தார்கள்.

    (2) ஆனால், ரணில் முடிவாக சொல்லிவிட்டார், இதற்கு ஆதரவு அளிக்கா விட்டால், முஸ்லிம்கள் அரசாங்கத்திலிருந்து விரட்டபடுவார்கள், அமைச்சர் பதவிகள் பறிக்கபடுமென. உடனடியாக இரண்டு கையையும் தூக்கி ஆதரவு அளித்து விட்டார்கள்.

    (3) இதிலிருந்து தமிழர்களுக்கு (TNA) க்கு கிடைக்கும் படிப்பினை என்ன? வட-கிழக்கு இணைப்பிற்கு தேவை அரசின் (சிங்களவர்கள்) சம்மந்தம் மட்டுமே. அது இருந்தால் ரணில் க்கு தெரியும் எப்படி முஸ்லிம் தலைவர்களை வெருட்டி, கையை தூக்க வைப்பது என.
    எனவே, இதற்கு அரசை மசிய வைக்க தமிழர்களின் சர்வதேச காய் நகர்த்தல்கள் அவசியம்.

    ReplyDelete
  6. I cannot understand What is this guy is doing? and How he was elected and who voted for him?

    ReplyDelete

Powered by Blogger.