Header Ads



பாகிஸ்தானை புலியாக மற்றும் திறமை, இம்ரான்கானுக்கு மட்டும்தான் உள்ளது -

பாகிஸ்தானை ஆசிய புலியாக மாற்றும் திறமை இம்ரான் கானுக்கு உள்ளதாக, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், அந்நாட்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் ஆட்சியமைக்கும் நிலை அங்கு உருவாகியுள்ளதால், பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் உருவெடுக்கவுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது ஆதரவினை இம்ரான் கானுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் ‘பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்றால் அனைவரும் இம்ரான் கான் பக்கம் நிற்க வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தானை ஆசிய புலியாக மற்றும் திறமை அவருக்கு மட்டும் தான் உள்ளது.

பி.டி.ஐ கட்சியினருக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக, பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. "THE MUSLIM VOICE" - Sri Lanka/Canada wish the new PM (Designate) Hon. Imran Khan, the People of Pakistan and the Pakistan Tehreek-e-Insaf (PTI) Party success, prosperity and political strength in the region and to develop Pakistan as a geo-political economic and military power in the future by the Grace of God AllMighty Allah, Insha Allah. Prime Minister (Designate) Hon. Imran Khan, on assuming office, should also work towards "Freeing Kashmir" from the oppression of India and bring "PEACE and PROSPERITY" to the people of Kashmir, Insha Allah.

    Please kindly convey our salaams and this message to the newly elected PM of Pakistan, Hon. Imran Khan, Insha Allah.
    Wassalaam.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice" (Sri Lanka),
    Political Communication Researcher and former SLFP District Organizer, Trincomalee District.

    ReplyDelete
  2. இறைவனின் இறுதித் தூதரின் இறுதி ஹஜ்ஜின் இதோபதேசத்தில் இருந்து:

    "மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!"

    (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

    ReplyDelete
  3. நல்ல ஆட்சி செயுங்கடா அதுலே புலியும் சிங்கமும் என்று சொல்லிக்கொண்டு இருக்காமே !

    ReplyDelete

Powered by Blogger.