Header Ads



மரண தண்டனையை நிறைவேற்ற, அமைச்சரவை முழு அனுமதி வழங்கியுள்ளது

போதைப் பொருள் கடத்தல் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்த தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை முழுமையான அனுமதியை வழங்கியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எப்படியான நிலைமையாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித இதனை குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு திருந்தி வாழ சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. எனினும் அவர்கள் சிறைக்குள் இருந்தவாறு வழக்கம் போல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதை தடுக்க இப்படியான கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்.

மேலும் சிறை கைதிகளின் இந்த குற்றச் செயல்களுக்கு உதவி வழங்கிய சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.