Header Ads



ஹிட்லர் போன்று, புலிகளும் அதிக குற்றங்களை செய்தனர் - ராஜித

விஜயகலாவை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு பிரதமர் கூறியமை தொடர்பில் தமக்கு தெரியாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையின் ஊடக சந்திப்பு இன்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

விஜயகலாவை தற்காலிகமாக பதவி நீக்குமாறு பிரதமர், ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் உண்மையா என அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தற்போது போல் குற்றங்கள் இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் விஜயகலா கூறியது உண்மை தான்.

ஏனெனில் அவர்கள் செய்த செய்த குற்றங்களே அதிகம். அது போன்றே ஹிட்லர் இருந்த காலத்திலும். அவர் செய்த குற்றங்களே போதுமானதாக இருந்தன என அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.