யாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடி, சிரமதானம் செய்யப்பட்டது.
யாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடி இன்று(15) ஞாயிறு காலை சிரமதானம் செய்யப்பட்டது.
யாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம் நியாஸ் (நிலாம்) மற்றும் மாநகர சபை உறுப்பினர் முஹம்மட் நிபாஹீர் ஆகியோரின் அணுசரனையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
குறித்த சின்னப்பள்ளிவாசல் மையவாடி பற்றைகளால் சூழ்ந்து காணப்பட்டதை அடுத்து மேற்படி சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் குறித்த மையவாடியை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சின்னபள்ளி வாசல் சிரமதானத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.தமிழர்கள் நாம் முன்வந்து யாழ்ப்பாணப் பள்ளிவாசல்களின் மறுசீரமைப்பு சிரமதானம் எல்லாவற்றையும் செய்து தந்திருக்க வேண்டும். அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வருகிறபோது சின்னப் பள்ளிவாசலுக்கு வந்து எங்கள் இனத்தின் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறவேண்டும்.
ReplyDelete