Header Ads



அலுகோசு பதவிக்கு, இதுவரை 8 பேர் விண்ணப்பம்!

தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவியில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி 8 பேர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக சிறைச்சாலை தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதவிக்கான விண்ணப்பங்களை பெற இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை எனவும் எதிர்வரும் 27ம் திகதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் சிறைச்சாலை தலைமையகம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் இவர்களில் மூன்று பேர் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் எனவும் சிறைச்சாலை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

இதனையடுத்து மரண தண்டனை விவகாரம் சூடு பிடித்துள்ளதுடன் மரண தண்டனை நிறைவேற்று அலுகோசு பதவிக்கு ஆட்களை நியமிப்பது தொடர்பாகவும் சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

1 comment:

Powered by Blogger.