Header Ads



4 வயது சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 20 ஆண்டுகளின் பின் 10 வருட கடூழிய சிறை

திஸ்ஸமஹாராம- பெரலியத்த, குடாகம்மான பகுதியில் 20 வருடங்களுக்கு முன்னர், 4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபரொருவருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளதுடன், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றம்  இன்று நேற்று 26  உத்தரவிட்டுள்ளது.

குடாகம- பெரலியத்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய, ரணதுங்க ஆராச்சிகே தோன் மஹினந்த என்பவருக்கே இவ்வாறு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.