Header Ads



குவைத்தில் காணாமல் போன இலங்கை பெண் - 2 வருடங்களாக தேடுகிறார்கள்

வெளிநாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்ற பெண் ஒருவர் குவைத் விமான நிலையத்தில் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மஹவ - பொல்பித்திகம, கதுருவெவ பிரதேசத்தை சேர்ந்த தம்மிக்கா மெனிக்கே என்ற 46 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

தனது குடும்பத்தில் உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பணிப்பெண்ணாக குவைத் நோக்கி சென்றுள்ளார்.

2016ஆம் ஆண்டு மே மாதம் அவர் குவைத் சென்றுள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு சென்று பல துன்பங்களுக்கு மத்தியில் பணம் சம்பாதித்து, எதிர்காலம் தொடர்பில் கனவுடன் நாடு திரும்புவதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி இலங்கைக்கு வர தயாரான தம்மிக்கா தொடர்பில் 10 நாட்களாக எவ்வித தகவலும் கிடைக்கிவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தம்மிக்கா குவைத் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவர் அழைத்து வரப்பட்ட சாரதி குறித்து சந்தேகம் உள்ளதாக தம்மிக்காவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.