Header Ads



கொழும்பில் 2 தினங்களில் மூவர் சுட்டுக்கொலை - இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த இரு தினங்களில் மூவரை சுட்டுக் கொலை செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

செட்டியார் தெரு ஆண்டிவால் சந்தியில் உள்ள கடையில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணா என்று அழைக்கப்படுகின்ற கிருஷ்ணப்பிள்ளை கிருபானந்தன் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது

கடைக்கு வந்த ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட காட்சி அங்கிருந்த 4 CCTV கெமராக்களில் பதிவாகியிருந்தது.

கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நவோதயா மக்கள் முன்னணி, சுயேட்சைக்குழுவாகப் போட்டியிட்டு 2 ஆசனங்களைத் தன்வசப்படுத்தியது.

இதேவேளை, ஜம்பட்டா வீதி, 131 ஆம் தோட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான எலிசபத் பெரேரா மற்றும் அவரது கணவர் செல்லையா செல்வராஜ் ஆகியோரது பூதவுடல்கள் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இறுதிக்கிரியைகள் நாளை (11) நடைபெறவுள்ள நிலையில், இதுவரை சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை.

1 comment:

Powered by Blogger.