Header Ads



டுபாயிலிருந்தபடி இலங்கையர்களை கொலைசெய்யும், பாதாளத் தலைவன்

நாட்டின் பாதுகாப்பு நிலை தற்போது பலவீனமடைந்து இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

டுபாயில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் ஒரே ஒரு தொலை பேசி அழைப்பை மேற்கொள்வதன் மூலம் இங்கிருக்கும் யாரையும் கொலை செய்ய முடியும். எம்மையும் கொலை செய்ய முடியும். அவ்வாறான நாயகனை பாதாள உலகக்குழுவின் தலைவர் என்று அழைப்பர். இவர் டுபாயில் இருக்கின்றார்.

இன்று அவர்களுக்கு முழு நாடும் பயந்து வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பிரதேசசபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அனைவரும் கொலை செய்யப்படுகின்றனர்.

கடந்த ஆட்சி காலத்தில் அடங்கியிருந்தவர்கள் தற்போது மீண்டும் தமது வேலையை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் போதைப்பொருள் பாவனை என்பது இந்த நாட்டில் அதிகரித்துள்ளது. வீதிக்கு சென்றால் தேவையான அளவு போதைப்பொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கின்றது. அடிக்கடி அமைச்சரவை மாற்றம் செய்வதே இதற்கான காரணமாக இருக்கின்றனது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.