அமைச்சர்கள் கூறும் கதைகளால், பாதாள கோஷ்டிகள் பலமடைந்து மக்களே அச்சத்தில் வாழ்கின்றனர்
அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பாதாள கோஷ்டிகளுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். அரசாங்கம் பாதாள கோஷ்டிகளின் பக்கம் உள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்று நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் பாதாள கோஷ்டிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருவதை அவதானிக்க முடிகின்றது. கடந்த காலங்களில் வடக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் இன்று நாடு முழுவதும் பரவி அனைத்து பகுதிகளிலும் ஆயுதங்களுடன் துப்பாக்கிச்சூடுகளை நடத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
எனினும் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் கூறும் கதைகளால் பாதாள கோஷ்டிகள் பலமடைந்து வருவதுடன் நாட்டு மக்களே அச்சத்தில் வாழ்கின்றனர். அமைச்சர்களும் அதிகாரிகளும் பாதாள கோஷ்டிகளை இயக்கிக்கொண்டு அவர்களுக்கு வக்காலத்து வாங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளள.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் அவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதாள கோஷ்டிகளுடன் இணைந்து அரசியல் செய்த வரலாறே உள்ளது. அவர்கள் அதிகாரத்துக்கு வந்தவுடன் நாட்டில் பாதாள கோஷ்டிகளின் ஆதிக்கம் தலைதூக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயமே. நாளுக்கு நாள் பாதாள கோஷ்டிகளின் செயற்பாடுகள் அதிகரித்துச் செல்லும். இப்போதும் அவ்வாறே இடம்பெற்று வருகின்றது. பட்டப்பகலில் பாதாள கோஷ்டிகளின் செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றன.
கடந்த காலங்களில் முன்னைய ஆட்சியில் அடக்குமுறைகள் இருந்த காரணத்தால் தான் ஆட்சி மாற்றம் ஒன்றை மக்கள் ஏற்படுத்தினர். எனினும் இந்த ஆட்சியில் மேலும் மோசமாக அடக்குமுறைகள் இடம்பெற்று வருகின்றன. ஆகவே இன்று நாட்டில் நிலவும் மோசமான நிலைமைக்கு இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறியாக வேண்டும் என்றார்.
Your leader my3 or mahinda.
ReplyDeleteWekkamketta payale.