"பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும்"
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ஷ போட்டியிட்டால், தனது ஆதரவை பசில் ராஜபக்ஷவிற்கு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் மஹிந்த ராஜபக்ஷ யாரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தாலும் அவர்களுக்கு தான் ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அம்பாறை பகுதியில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment