ஞானசாரருக்கு எதிரான தண்டனை, நாளை அறிவிக்கப்படுகிறது
சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிரான தண்டனை நாளை -14- அறிவிக்கப்படவுள்ளது. ஹோமாகம நீதிவான் உதேஷ் ரணதுங்க இந்த தண்டனையை நாளை அறிவிக்கவுள்ளார்.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின் கைவிரல் ரேகை முன்னதாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்த படி நாளை இந்த தண்டனை அறிவிக்கப்பட்வுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற எக்னெலிகொட கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் வைத்து எக்னெலிகொடவின் மனைவி சந்யாவை திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் ஹோமாகம பொலிஸாரால் இந்த வழக்கு தண்டனை சட்டக் கோவையின் 386 மற்றும் 486 ஆம் அத்தியாயங்களுக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில் வழக்கு விசாரணைகளில் ஞானசார தேரருக்கு எதிரான இரு குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தே நீதிவான் ஞானசார தேரரை குற்றவாளியாக அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது
நீதித்துறைக்கு மிகவும் சவாலான விடயம், உங்களின் நீதியும் படிப்பும் நாளைதான் தெறியவரும். பொருத்திருந்து பார்போமே!
ReplyDeleteஏதும் தடங்குகள் வருமென்றே நினைக்கிறோம் அல்லது உப்பு சப்பில்லாத தண்டமையாக ஏதும் வரும்.
நீதிமன்றத்தின் தன்னதிகாரம் எப்போதோ செத்துப்போய்விட்டது. அதனால் தலை நிமிர முடியுமா என்பதே கேள்வி. எந்தப் புற்றிலிருந்து எந்தப் பாம்பு வந்து ஆசாமிக்கு அடைக்கலம் கொடுக்குமோ தெரியாது!
ReplyDelete