மஹாவலி கங்கையில் காணாமல் போன, சவூதி பெண்ணை தேடி வேட்டை
( மொஹொமட் ஆஸிக்)
பேராதனை கன்னோருவ வீதியில் மஹாவலி கங்கையில் இன்று 20 ம் திகதி மாலை இடம் பெற்ற படகு விபத்து ஒன்றில் சவுதி அரேபியா நாட்டைசேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கானாமற் போயுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
இன்று மாலை சவுதி அரேபியா வைசேர்ந்த எட்டு சுற்றுலா பயனிகளுடன் மஹாவலி கங்கையில் பயனித்த படகு கன்னோருவ பிரதேசத்தில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
இப் படகு விபத்துக்கு உள்ளாகும் போது அதில் ஐந்து ஆண்களும் மூன்று பெண்களும் இருந்துள்ளதுடன் படகோட்டியுடன் ஒன்பது பேர் இருந்துள்ளனர்.
படகு விபத்து இடம் பெற்றதுடன் பிரதேச வாசிகள் பொலீஸாரினதும் கடற் படையினரினதும் உதவியுடன் ஏழு பேரை காப்பாற்றியுள்ளதுடன் மேலும் 24 வயதுடைய ஒருபெண் கானாமற் போயுள்ளார்.
கானாமற் போயுள்ள அப்பெண்ணை தேடும் நடவடிக்கையில் பொலீஸார் மற்றும் கடற் படையினர் இன்று 20 ம் திகதி இரவு வேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டைபொலீஸார்மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.
Post a Comment