ஒழுக்கத்தினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் - ரசிகர்கள இன்ப அதிர்ச்சி
உலகக்கோப்பை கால்பந்து ரஷியாவில் நடைபெற்று வருகிறது. ‘H' பிரிவில் எந்த அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவது என்பதை உறுதி செய்யும் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது.
ஒரு ஆட்டத்தில் ஜப்பான் - போலந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் போலந்து 1-0 என வெற்றி பெற்றது.
அதேவேளையில் இந்த பிரிவில் இடம்பிடித்துள்ள கொலம்பியா - செனகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என வெற்றி பெற்றது.
இதனால் ஜப்பான், செனகல் அணிகள் ஒரு வெற்றி, ஒரு டிரா மூலம் தலா 4 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தது.
இதனால் எந்த அணி அதிக கோல் அடித்தது என்று பார்க்கப்பட்டது. அப்போது இரண்டு அணிகளுமே நான்கு கோல் அடித்து சமநிலையில் இருந்தது.
இதனால் எந்த அணி அதிக கோல் வாங்கியது என பார்த்தபோது, இரு அணிகளும் தலா நான்கு கோல்கள் வாங்கியிருந்தன.
இதனால் கோல் அடிப்படையிலும் இரு அணிகள் சமநிலை பெற்றிருந்தன.
இதனால் ஒழுங்கு நடவடிக்கையில் யார் சிறந்த அணி என்பது பார்க்கப்பட்டது.
இதில் செனகலுக்கு சறுக்கல் ஏற்பட்டது. செனகல் 6 YELLOW கார்டு பெற்றிருந்தது. ஆனால் ஜப்பான் 4 YELLOW கார்டுதான் பெற்றிருந்தது.
இதனால் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியதால் மூலம் ஜப்பான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
Post a Comment