பாலித தேவப்பெருமவை, விரட்டிய காட்டு யானை -
வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவை காட்டு யானை ஒன்று தாக்குவதற்காக விரட்டிய சம்பவம் நேற்று -29- நடந்துள்ளது.
திம்புலாகலை - நவமில்லான - இத்த பிச்ச குளத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க சென்ற போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிகிச்சையளிக்க சென்ற பிரதியமைச்சர் உட்பட குழுவினரை அந்த யானை சுமார் 100 மீற்றர் வரை தூரத்தியுள்ளது.
இதனையடுத்து பிரதியமைச்சர் தனது வெள்ளை உடையை கழற்றி விட்டு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அணியும் சீருடையை அணிந்துக்கொண்டு யானைக்கு சிகிச்சையளிக்க சென்றுள்ளார்.
வெஹெரகலை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளும் கால்நடை மருத்துவர்களுக்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த யானைக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.
Post a Comment