Header Ads



ராஜபக்ஷ ஆட்சியைநோக்கி சுயநினைவற்று நகரும் இலங்கை - நல்லாட்சியே காரணம் என அறிவிப்பு

இலங்கையானது, ராஜபக்ஷ ஆட்சியை நோக்கி சுயநினைவற்று நகர்ந்துச் செல்வதாக, கொழும்பைத் தலைமையாக கொண்டு செய்யப்படும் புத்திஜீவிகள் அமைப்பான கொள்கை கற்கைகளுக்கான நிறுவகத்தின் தலைவர் பேராசியர் சசீ சாலி தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் என்ற பரிசோதனை தோல்வியடையும் நிலையில் உள்ளது.

தற்காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார சூழ்நிலை மாற்றங்களால், இலங்கை மீண்டும் ராஜபக்ஷ கால ஆட்சியை நோக்கி நகர்வதாகவே படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய அரசாங்கம், மீண்டும் ராஜபக்ஷ ஆட்சி மலரும் வகையான செயற்பாடுகளை புரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. his name is not shasi shally but Raseen Sally.Before publishing names and news article you have to check again and again about accuracy of it's content as a responsible website.

    ReplyDelete

Powered by Blogger.