Header Ads



கோடீஸ்வர நண்பனை, கொலைசெய்த இசைக் கலைஞர்கள் - சீதுவயில் பயங்கரம்

சீதுவ பகுதியில் பிரபல இசைக் குழுவின் இசைக்கலைஞர்கள் சிலர் பணத்திற்காக தங்களது கோடீஸ்வரரான நண்பனை கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் சீதுவ கோடுகொடை பகுதியைச் சேர்ந்த மாணிக்ககல் வியாபாரம் செய்யும் கோடீஸ்வரரான பீ.டீ.டிலான் என்பவராவார்.

கொலை செய்யப்பட்டவரிடம் பெறுமதி வாய்ந்த அதி சொகுசு கார் ஒன்று இருந்துள்ளது. 

குறித்த இசைக்குழுவின் தலைவரும் பிரதான பாடகரும் இனைந்து தங்களது பணக்கார நண்பனை கொலை செய்து விட்டு அவரிடமிருந்த பெறுமதி மிக்க அதி சொகுசு காரை கடத்திச் சென்று அதை பகுதி பகுதியாக கலட்டி விற்பனை செய்து பணம் பெற திட்டம் தீட்டியுள்ளனர்.

திட்டத்தின் படி கடந்த மாதம் 23ஆம் திகதி கோடீஸ்வர நண்பனை இசைக்குழுவின் பிரத்தியேக அறைக்கு வரவழைத்து மிக கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் வயலின் இசைக் கருவியின் தந்தியினால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.

அதன் பின்னர் கொலை செய்த நண்பனின் உடலை பாரிய கல் ஒன்றில் கட்டி தடுகம் ஓய ஆற்றின் மிக ஆழமான பகுதியில் மூழ்கச் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தோடு தொடர்புடைய அனைவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.