Header Ads



சு.க. இன்றைய கூட்டத்தில், இரண்டில் ஒரு தீர்மானம் எடுக்கப்படும்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  இன்று (17) இடம்பெற உள்ளது.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து விலகிய அக்கட்சியின் 16 உறுப்பினர்களும் கட்சியின் வளர்ச்சிக்காக சில ​யோசனைகளை முன்வைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய அரசாங்கத்திலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விலக வேண்டும் என அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும், இன்றைய கூட்டத்தில் இரண்டில் ஒரு தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் 16 பேர் சார்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் சபாநாயகர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.