Header Ads



செல்பி எடுக்கமுயன்றவர், கரடி தாக்குதலில் பலி (அதிர்ச்சிகர வீடியோ)

இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் சாரதியாக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு குழுவினருடன் வான் ஒன்றில் காட்டு பகுதி வழியாக அவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் ஒரு கரடியை அந்த குழுவினர் பார்த்துள்ளனர். அந்த கரடி காயமடைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி கரடியை அருகில் சென்று பார்க்க முயற்சி செய்துள்ளனர். அப்போது டிரைவர் பிரபு பட்டாரா அந்த கரடியுடன் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.

உடனிருந்தவர்கள் அவரை எச்சரித்துள்ளனர். செல்பி எடுக்க முயற்சி செய்த போது கால் தவறி அவர் கரடி அருகே விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கரடி பிரபுவை தாக்க முயற்சி செய்தது.

கரடியிடம் சிக்கிக்கொண்ட அவர், அதனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார்.அருகில் இருந்தவர்களும் அந்த கரடியை தாக்கி, அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

இருப்பினும் அந்த கரடி அவரை இறுதிவரை தப்பிக்க விடவில்லை. இறுதியில் பிரபு பட்டாரா கரடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.



No comments

Powered by Blogger.