Header Ads



கொழும்பிலுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு என்ன நடந்தது..? அமீன் கேள்வி


கொழும்பு மாவட்ட மாணவ சமூகம் தலைநகரில் சகல வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது. பல்கலைக்கழகங்கள், சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, ஏனைய கல்வி நிறுவனங்கள் எல்லாம் கொழும்பு மாவட்ட மாணவர்களின் காலடியில் அமைந்திருக்கின்றன. ஆனால், ஒப்பீட்டு ரீதியில் பார்க்கின்றபோது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களே இவற்றிலிருந்து பயனடைகின்றனர். எனவே, கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இவற்றை உச்ச அளவில் பயன்படுத்த வேண்டியது அவர்களது கடமையாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரமும் SERENDIB SCHOOL DEVELOPMENT FOUNDATION இன் LICO Club உம் இணைந்து ஏற்பாடு செய்த 60ஆவது ஊடக செயலமர்வு கொழும்பு ஹைரிய்யா பெண்கள் கல்லூரியில்  நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

கொழும்பு மாவட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் வாசிப்புப் பழக்கத்தை மேலும் விருத்தி செய்ய வேண்டும். பொதுவாக இன்று இளம் சமூகத்தினர் மத்தியில் வாசிப்புப் பழக்கும் குன்றிவரும் நிலையில் கொழும்பு மாவட்ட மாணவர்கள் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் - என்றார்.

போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தலைமையில் “21ஆவது நூற்றாண்டில் ஊடகம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இச் செயலமர்வில் கொழும்பு மாவட்டத்தின் எட்டுப் பாடசாலைகளைச் சேர்ந்த 90 மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.


No comments

Powered by Blogger.