வானொலி சத்தமாக ஒலித்த விவகாரம் - தந்தையின் காதை கடித்த மகன்
மகனொருவர், தந்தையின் காதுகளை கடித்த வினோத சம்பவமொன்று பதுளை - கந்தகெட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது குறித்த தந்தையும், மகனும் அதிக மதுபோதையில் இருந்ததாக சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டில் இருந்த இரண்டு வானொலிப் பெட்டிகள் சத்தமாக ஒலித்ததன் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் 50 வயதான தந்தையும், 26 வயதான மகனும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலின் போது இருவரும் படுகாமயடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மகனின் தலை மற்றும் உடலின் சில இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தின் போதே மகன், தந்தையின் காதுகளைக் கடித்துள்ளதுடன், தலையில் காயம் ஏற்படும் வகையில் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment