Header Ads



"ஜனாதிபதி ஆகுவதே, சம்பிக்கவின் கனவு"

சம்பிக்க ரணவக்கவின் கனவு 2025ல் ஜனாதிபதி ஆகுவதே என பிரஜைகளின் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.

சமூக மற்றும் அமைதிக்கான நிலையத்தில் நேற்று இடம்பெற்ற பிரஜைகளின் சக்தி அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி பதவிக்கு வரும் வரை ஜனாதிபதி முறையை தான் மாற்றுவதாக கூறும் அனைவரும் பதவிக்கு வந்ததன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் தான் ஜனாதிபதியாக என ஆசைப்படுகின்றனர்.அதனால் அவர்களால் இந்த விடயம் மேற்கொள்ளப்படுவதில்லை. சம்பிக்க ரணவக்க போன்றோர் ஜனாதிபதி முறைமையை மாற்றுவதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.2025ல் இந்த நாட்டு ஜனாதிபதி ஆவதற்கு தன்னால் முடியும் என சம்பிக்க ரணவக்க நினைத்துக் கொண்டிருக்கிறார் என பிரஜைகளின் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
    (அல்குர்ஆன் : 31:34)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. பௌத்த துவேசத்துக்கு எண்ணெய் ஊற்றி வளர்க்க மிகப் பொறுத்தமான ஒருவர்தான் இவர். இந்த நாட்டு மக்கள் மிகவும் கவனமாக தீர்மானம் எடுக்க வேண்டிய தருணம் இது.

    ReplyDelete

Powered by Blogger.