Header Ads



அவசர சிகிச்சைப் பிரிவில் கபீர் , ரணில் நேரில்சென்று பார்த்தார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் உடல்நிலை தேறி வருவதாகவும், பிரதமரும், கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, வைத்தியசாலைக்குச் சென்று அவரை பார்வையிட்டதாகவும் ஐ.தே.க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தத் தகவலை அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின நிகழ்வில் உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.