Header Ads



எனது வீட்டிற்கு வந்த கோட்டாபய, கண்ணீர் விட்டழுதார் - நான் பணம் கொடுத்து அனுப்பினேன்

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தனது வீட்டிற்கு வந்த கோத்தபாய, கண்ணீர் விட்டு அழுததாகவும், பின்னர் ஒருதொகை பணம் கொடுத்து வீட்டிலிருந்து அனுப்பியதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கம்பஹாவில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். கோத்தாபய ராஜபக்ச நாட்டில் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது பலர் பயந்தார்கள்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எனது வீட்டுக்கு வந்த கோத்தபாய அழுதார்.

அதன்போதும் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து அவரை வீட்டியிலிருந்து அனுப்பிக் கொண்டேன். அதேபோன்று, கட்டுப்பணத்தை கொடுத்து அவருக்கு உதவுவதற்கு நான் தயார் எனவும் அமைச்சர் பொன்சேகா மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.