இலங்கை குறித்து, மனித உரிமைகள் ஆணையாளர் ஆலோசனை
ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுஸைன் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அஹீஸை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பணிமனை தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
இதன்போது இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கம், பாதுகாப்பு, மனித உரிமைகளை ஊக்குவித்தல், சட்டத்தின் ஆட்சி என்பனவற்றுடன், பிராந்திய அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment