Header Ads



ஐ.தே.க. க்கு எதிராக, முன்னணி ஒன்றை உருவாக்க திட்டம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கூறினார். 

அந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதாக என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார். 

அதேநேரம் கட்சியின் அனைத்து பதவிகளிலும் சீர்திருத்தம் செய்து கட்சியின் முழுமையான மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் சந்திம வீரக்கொடி கூறினார். 

17ம் திகதியின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான முன்னணி ஒன்றை உருவாக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படும் என்று சந்திம வீரக்கொடி கூறினார்.

1 comment:

  1. ivarhal(2)katceehalum saree siya parkrarhala taveera nattukkoo nattu makkalkkoo yaduoom savay sayya vandom enrru eappotu nenayparhal adrkkul kalam mudeendu vedum pavam nattu makkalukku

    ReplyDelete

Powered by Blogger.