Header Ads



ஞானசாரால் தொந்தரவுக்கு உள்ளானோருக்கு கிடைத்த வெற்றி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை தாக்க முற்பட்டமை, அச்சுறுத்தியமை தொடர்பில், நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், ஞானசார தேரர் இன்று ஹோமாகம நீதிமன்றால் குற்றவாளியாக இனங் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்திருந்த, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி ​இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“ஞானசார தேரரால் தொந்தரவுக்கு உள்ளான அனேகமானோர் இந்த நாட்டில் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்குமான வெற்றி இது, அவர்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும்.” என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. அல்லாஹ் வின் ஏற்பாட்டில் எல்லாம் சரியாக வே நடக்கும். அவன் சமூகமே அவனை அழித்து விடும்.

    ReplyDelete
  2. கொடுத்தால் வெற்றிதான் ஆனால்...?

    ReplyDelete
  3. இந்த சட்டத்தீர்ப்பை மாற்றுவதற்காகத்தான் இந்த நாட்டின் தலைமை காத்து நிற்கின்றது. இனத்துவேசம் தலைவிரித்தாடும் நாட்டில் சட்டம் நீதியை நிலைநாட்டுவது பகற்கனவு.

    ReplyDelete
  4. ok fine, theerpu neethimandra theerpu enna endu neegal eluthawillaye ????

    ReplyDelete

Powered by Blogger.