இன்றுமுதல் பேரீச்சம்பழம், பள்ளிவாசல்களுக்கு விநியோகம்
முஸ்லிம்களின் நோன்புகால பாவனைக்காக அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள பேரீச்சம்பழம் இன்று -22- முதல் நாட்டிலுள்ள பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் 250 மெற்றிக்தொன் பேரீச்சம்பழங்களை உள்ளூர் சந்தையில் கொள்வனவு செய்து ஏற்கனவே நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது. மத்திய நிலையங்களாக மாவட்டங்களிலுள்ள களஞ்சிய வசதியுடைய பெரிய பள்ளிவாசல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய நிலையங்களிலிருந்து ஏனைய பள்ளிவாசல்களுக்கு இன்றுமுதல் பேரீச்சம்பழம் விநியோகிக்கப்படவுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் இவ்விநியோகத்தில் பங்குகொள்ள உள்ளனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கம் தயாரித்துள்ள பள்ளிவாசல்களின் பெயர்ப் பட்டியலுக்கு மாத்திரமே பேரீச்சம்பழம் பகிர்ந்தளிக்கப்படுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலீக் தெரிவித்தார்.
-Vidivelli
நல்லது நடக்கட்டும்
ReplyDelete