Header Ads



இன்றுமுதல் பேரீ­ச்­சம்­பழம், பள்­ளிவா­ச­ல்­க­ளுக்கு விநி­யோ­கம்

முஸ்­­லிம்­களின் நோன்­புகால பாவ­னைக்­காக அர­சாங்­கத்­தி­னால் கொள்­­வ­னவு செய்­யப்­­பட்டுள்­ள பேரீ­ச்­சம்­பழம் இன்று -22- முதல் நாட்­டி­லுள்ள பதிவு செய்யப்­பட்­டுள்ள பள்­ளிவா­ச­ல்­க­ளுக்கு விநி­யோ­கிக்கப்­ப­ட­வுள்­ளது.

கூட்­­டு­றவு மொத்த விற்­பனை நிலையம் 250 மெற்­றிக்தொன் பேரீச்­சம்­ப­ழங்­களை உள்ளூர் சந்­தையில் கொள்­வ­னவு செய்து ஏற்­க­னவே நாட்­டின் ஒவ்வொரு மாவட்­டத்­தி­லுமுள்ள மத்திய நிலை­யங்­க­ளுக்கு அனுப்பிவைத்­துள்­ளது. மத்­திய நிலை­யங்­க­ளாக மாவட்­டங்­க­ளி­லுள்ள களஞ்­சிய வச­தி­யு­டைய பெரிய பள்­ளி­­வா­சல்கள் தெரிவு செய்­யப்­பட்­டு­ள்­ளன.

மத்­திய நிலை­­யங்­க­ளி­லி­ருந்து ஏனைய பள்­­ளி­வா­சல்­க­ளுக்கு இன்றுமுதல் பேரீச்­சம்­பழம் விநி­யோ­கிக்­கப்­படவுள்­ளது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் இவ்­வி­நி­யோ­கத்தில் பங்­கு­கொள்ள உள்­ளனர்.

முஸ்­லிம் சமய பண்­பாட்­ட­­லு­வல்கள் திணைக்கம் தயா­ரித்­துள்­ள பள்­ளி­வா­சல்­க­ளின் பெயர்ப் பட்­டி­ய­லுக்கு மாத்தி­ரமே பேரீச்­சம்­பழம் பகிர்ந்­­த­ளிக்­கப்­­ப­டு­மென முஸ்லிம் சம­ய பண்­பாட்­ட­­லு­வல்கள் திணை­க்­க­ளத்தின் பணிப்­பா­­ளர் எம்.ஆர்.எ­ம்­.மலீக் தெரி­வித்தார்.

-Vidivelli

1 comment:

Powered by Blogger.