பள்ளிகளுக்கு நஷ்டஈடு, வழங்குவதில் சிக்கல்
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களில் அநேகமானவை நஷ்டஈடு கோரி தமது விண்ணப்பங்களை புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைக்காமையினால் பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடு வழங்குவதில் சிக்கல் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 20 பள்ளிவாசல்கள் வன்செயல்களின்போது சேதமாக்கப்பட்டன. சில பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டன. பள்ளிவாசல்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக புனர்வாழ்வு அமைச்சு விண்ணப்பங்களை கோரியிருந்தாலும் இதுவரை 7 பள்ளிவாசல்களே விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளன.
இது தொடர்பில் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.எம்.பதுர்தீனைத் தொடர்புகொண்டு வினவியபோது,
இதுவரை 7 பள்ளிவாசல்களின் விண்ணப்பங்களே கிடைக்கப்பெற்றுள்ளன. கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் சில பூரணமற்றதாக இருக்கின்றன. பள்ளிவாசலின் பதிவு இலக்கம், வங்கிக் கணக்கிலக்கம் என்பன குறிப்பிடப்பட்டில்லை. இதனால் நஷ்டஈடு வழங்குவதில் பிரச்சினை உருவாகியிருக்கிறது. பள்ளிவாசல் நிர்வாகங்கள் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் நஷ்டஈடு கோருவதற்கான விண்ணப்பத்தை கால தாமதமின்றி உடனடியாக அனுப்பி வைக்கவேண்டும் என்றார்.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கண்டி மாவட்டக் கிளையின் செயலாளர் மௌலவி ஏ.எல்.ஏ.கப்பாரைத் தொடர்பு கொண்டு வினவியபோது கண்டி மாவட்டத்தில் வன்செயலினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகங்களை உலமா சபையின் கண்டி மாவட்ட கிளை தொடர்புகொண்டு நஷ்டஈடு பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை தாமதியாது அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பல பள்ளிவாசல்கள் இவ்விடயத்தில் அசிரத்தையாக இருப்பது கவலைக்குரியதாகும்.
பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினரின் அசிரத்தையால் பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடு பெற்றுக்கொள்வது தொடர்ந்தும் தாமதமாகி வருகிறது. எனவே வன்செயல்களால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள் இது தொடர்பில் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
-Vidivelli / ARA.Fareel
What??? Are all the mosques going to be rennovated under the Ministry of Hinduism. Anyway it's a good sign for the barbarians
ReplyDeleteMr Anusath Chandrabal,
ReplyDeleteDon’t shout like Bullshit Man. You have to learn something. There is a procedure in Ministry of Disaster Manegement in Sri Lank for obtaining compensation. Please learn something before you comment.