Header Ads



தென் மாகாண வரைஸ் காய்ச்சல் -13 மரணம், 600 பேர் பாதிப்பு

தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வரைஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வரைஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந் நிலையில் இந்த நோய் சம்பந்தமாக ஆராய சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் நிபுணர்கள் அடங்கிய குழு, நாளை அங்கு விஜயம் செய்யவுள்ளது.  

இந்த குழுவானது காலி, மாத்தறை மற்றும் கம்புறுபிட்டிய ஆகிய பகுதிகளில் ஸ்தல பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதுடன் குறித்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த பூரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.