சிங்களவர்களின் குற்றச்சாட்டை, இனவாதமாக பார்க்கலாமா..?
-லரீப் சுலைமான்-
இலங்கை முஸ்லிம்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தியிருக்கும் அம்பாறை-, திகன வன்முறை சிங்கள சகோதரர்களின் கீழ்மனதில் ஊறிக் கிடக்கும் வஞ்சகத்தை, குரோதத்தை வெளிக்காட்டி நின்றாலும் இந்த வன்முறைச் சம்பவத்தின் பின்னர் சிங்கள படித்த, படியாத பாமர மக்களிடமிருந்து வெளிப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மீளாய்வு செய்து பார்க்கின்றபோது, தேசாபிமானமற்ற சில குழுக்கள் ‘இனவாத’ செயற்பாடாக இப்பாதகத்தைத் தொடங்கி விட்டிருந்தாலும், சிங்கள அப்பாவி மக்களும் இன்று முஸ்லிம்களை சந்தேகப்படும், அச்சப்படுமளவுக்கு நிலைமை மாறியுள்ளதால், இவ்விடயத்தை இனவாத சிந்தனைக்கப்பால் அவர்களின் ‘அடிமட்டப் பிரச்சினை’ யாகவே (The bottomline Problam) நோக்க வேண்டியுள்ளது.
சிங்கள மக்களின் குற்றச்சாட்டுக்கு ‘தெளிவு போதாமை’ ஒருபக்கமிருந்தாலும் குறிப்பாக, முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டிய கருமங்களும் இவற்றில் இல்லாமலில்லை. இஸ்லாமிய சட்டம், இந்த நாட்டினுடைய சட்டம் இரண்டும் எங்களுக்கு முக்கியமானவை. நாட்டுச் சட்டத்திற்காக மார்க்கத்தை அமிழ்ந்து போகச் செய்ய முடியாது. ஆனால், பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் நாட்டுச் சட்டத்திற்குள் தங்களது வாழ்வை, பண்பாட்டு முறைகளை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்கும் ஷரீஆ சட்டத்தில் இடமிருக்கிறது. ஷரீஆ சட்டம் ஒரு துருவத்திலும் நாங்கள் வேறொரு துருவத்திலுமாகப் பயணிக்க முடியாது.
கடுகைப் பார்த்து மிளகை இழப்பதுபோன்று, இன்று எங்களை அறியாமலேயே சிறிய சிறிய நன்மைகளுக்காக பெரிய பெரிய நன்மைகளை இழந்து கொண்டிருக்கிறோம் அல்லது தீங்குகளுக்கு பணம் செலுத்துகிறோம். இரண்டு தீமைகளில் ஒன்றைச் செய்துதானாக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்திற்கு மத்தியில், இரண்டிலும் தரத்தில் குறைந்த தீமையைச் செய்வதற்கு இஸ்லாத்தில் இடமிருக்கிறது.
இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுள்ள, முகத்தை மறைப்பது (நிகாப்), மறைக்காமல் விடுவது (ஹிஜாப்) ஆகிய இரண்டு விடயங்களுக்கும் ஆதாரங்கள் உண்டு. முகத்தை திறந்து விடுபவர்கள் ‘காபிர்கள்’ என்றிருந்தால், இன்று எமது பெண்களில் அதிகமானோர் காபிர்களாகவே இருக்க வேண்டுமே! துருக்கி, பலஸ்தீனைப் போன்று ஏன் இலங்கையைப் பார்க்க முயற்சிக்கிறோம்? நாங்கள் ஷரீஆவை முழுமையாகப் பின்பற்றுவதாக இருந்தால் களவெடுத்தவனின் கை துண்டிக்கப்பட வேண்டும், கொலை செய்தவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும், திருமணம் செய்தவன் விபசாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். இவற்றை ஏன் செய்கிறோமில்லை? ஆக, நமது ஷரீஆ சட்டத்தை நிறைவேற்ற இந்நாட்டுச் சட்டம் இடம்கொடுக்காது, அவ்வளவுதான்! எனவே, இவ்வளவு பெரிய பாவத்தைச் செய்தவனுக்கே இஸ்லாமிய தண்டனை வழங்க நாட்டுச் சட்டத்திற்கு நாங்கள் கட்டுப்பட வேண்டியுள்ளதென்றால், அதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டென்றால், ஹிஜாப் அணிவதைப் பற்றி நாங்கள் பெரிதாக தூக்கிப்பிடிக்கத் தேவையில்லையே?
“பேய், பிசாசுபோல் முகத்தை மூடிக்கொண்டு ஏன் எங்களது பிள்ளைகளை அச்சப்படுத்துகிறீர்கள்?” என்பதெல்லாம் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள மிக மோசமான குற்றச்சாட்டுகளாகும். நாங்கள் தூய எண்ணத்தில்தான் நிகாப் அணிகிறோம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தை எமது எதிரிகள் சாதகமாக்கி, எங்கள் மீது பழி தீர்ப்பதிலே குறியாயிருக்கிறார்களே! இதைப் பற்றி யார், ஹிஜாப் அணிபவர்களா சிந்திப்பது? இது, குளிக்கச் சென்று சேற்றைப் பூசிக் கொண்டு வருவது போலில்லையா? ஆள்மாறாட்டம், விபசாரம், பாலியல் தீண்டல், போதைப்பொருள் கடத்தல், கொலை, களவு, உளவு பார்த்தல் முதலான பாதக செயல்களில் நம் எதிரிக் கும்பல்கள் ஈடுபடுவதற்கு இந்த நிகாப் துணை புரிந்து, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே பாதிப்படையச் செய்யும் வாய்ப்புள்ளதாக எங்கள் புத்திக்கு தென்பட்டால், இதைப் பற்றிய எங்கள் கவலைகள் எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும்!
நாங்கள் ஏன் கறுப்பு நிறத்தில் அபாயாவைத் தெரிவு செய்கிறோம்? என்று கேட்டால், இந்த நிறத்தில் அணிபவர்களுக்குக் கூட பதில் சொல்லத் தெரியவில்லை. இந்தக் கறுப்பு நிறமும் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஒன்று.
கறுப்பு நிறத்துக்கு தனிக் கவர்ச்சியுண்டு. இரண்டு பெண்களில் ஒருவர் கறுப்பு நிறத்திலும் மற்றையவர், வேறொரு நிறத்திலும் அணிந்திருந்தால் பார்வைக்கு கறுப்பு நிற அபாயாவே முதலில் தென்படும். ஆக, பாதுகாப்பு என்ற பேரில் எங்களை அறியாமலேயே ஆபத்துக்கு விலைகொடுத்துக் கொண்டிருக்கிறோம். அரேபியப் பெண்களின் கறுப்பு நிற ஹபாயா முழு அரேபியாவுக்குமுரிய கலாசாரமாயிருக்கலாம், அது எங்களுக்குப் பிரச்சினையல்ல. ஆனால், சிங்கள மக்கள் அதை அரேபியக் கலாசாரமாகப் பார்க்கிறார்களே! இலங்கையில் அரேபியக் கலாசாரம் மிகைத்து விடுமோ என்ற பீதி அவர்களுக்குண்டே! சோகத்தை, துக்கத்தை வெளிப்படுத்த கறுப்பு நிறமே தொங்க விடப்படும். எனவே, துக்கத்தை (முஸீபத்) சுமந்து கொண்டு இந்நாட்டில் திரிவதாக அவர்கள் எங்களைப் பார்க்கிறார்கள். கறுப்பு நிற அபாயா அணிந்த பெண்ணொருவர், கர்ப்பிணித் தாய் ஒருவரை அழைத்துக் கொண்டு வைத்தியசாலை சென்ற சமயமொன்றில் அங்குள்ள தாதியர், “நல்ல நேரத்தில் கெட்டதையும்” உடன் கொண்டு வருவதாகக் கூறி, அழைத்துச் சென்றிருந்த அப்பெண்ணை திருப்பி அனுப்பி வைத்த சம்வபவமொன்றும் இலங்கையில் நடந்தேறியுள்ளது.
நாங்கள் எங்கிருக்கிறோம்? எங்களைச் சுற்றியுள்ள சவால்கள், பிரச்சினைகள், கழுத்தறுப்புகளின் பின்னணி கண்ணுக்குத் தெரிய வேண்டும். திகன வன்முறையின்போது சாதாரண கற்களை விடவும் கைக்கு அடக்கமான (உருளை) ஆற்றுக் கற்களும், இலகுவில் உடையாத கித்துள் பொல்லுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அம்பாறை, திகன அதற்கு முந்திய அளுத்கமை, கிந்தோட்டை வன்முறைகளையெல்லாம் நாங்கள் சுனாமியைப் போன்று, மண்சரிவு அல்லது வெள்ள அழிவு போன்று தற்செயலான நிகழ்வாக நோக்க முடியுமா? என்ற கேள்விக்குரிய விடை தெரிந்திருந்தாலும், பிரச்சினைக்குரிய காரணங்களை முதலில் விளங்கவும் அதற்கேற்ப எங்களது வெள்ளோட்ட சிந்தனை வேலை செய்யவும் வேண்டும்.
நடந்துள்ள பிரச்சினைகளையும் குற்றச்சாட்டுகளையும் நோக்குமிடத்து வழமையான ‘இனவாதமாக’ இப்போதைய சூழலுக்கு இதனைப் பார்க்க முடியாது. ஒட்டுமொத்த சிங்கள மக்களுக்குமுரிய பிரச்சினை என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான் நிலையான தீர்மானத்திற்கு வரமுடியுமே தவிர, குறிப்பிட்ட இனவாதக்குழுவுக்குரிய பிரச்சினையாக மட்டும் இவ்விடயத்தைப் பார்ப்போமாயின், தலைவலிக்கு பனடோல் போன்று தீர்க்கமான முடிவுகளை எங்களால் பெற முடியாது போய்விடும். மீண்டும் மீண்டும் எங்களை நோக்கி வீசப்படும் பந்தாக இவ்விடயம் கையாளப்படலாம். ஆனாலும், இதற்குரிய தீர்வை அவரவரே சிந்தித்து அணுக வேண்டியுள்ளது.
கடந்த 30 வருடங்களுக்கு முன்னிராத புதிது புதிதான கலாசார மாற்றங்களை முஸ்லிம்கள் பின்பற்றுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன, உண்மைதான்! 30 வருடங்களுக்கு முன்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கக்கூடிய ஆடைகளையே அணிந்தார்கள். மேலைத்தேய கலாசார மோகம் இப்போதெல்லாம் சிங்கள, தமிழ் பெண்களின் ஆடைகளில் நிறையவே மாற்றங்களைத் தோற்றுவித்துள்ளன. அவர்கள் அணிந்த நீளமான ஆடைகள் இப்போது அரைவாசிக்கும் குறைவு. ஆனால், முஸ்லிம் பெண்களின் ஆடைகள் இருந்ததை விடவும் இன்னும் சற்று நீளமாகியுள்ளது, அவ்வளவுதான்! உணவு முறைகள், பண்பாடுகள் எல்லாவற்றிலும் இன்று மேலைத்தேய கலாசாரத்தையே சிங்கள மக்கள் பின்பற்றுகிறார்கள். கௌதம புத்தரின் வழிபாடு எங்கோயிருக்க, இன்றைய பெரும்பாலான சிங்கள மக்களின் வழிபாடு வேறோரு திசைவழியில் பயணிக்கிறது. ஆடையணிவது முதல் வாழ்க்கைக் களியாட்டம் வரைக்கும் மேலைத்தேய கலாசாரத்தில் இருந்து கொண்டு, அரேபியர் கலாசாரத்தை இலங்கையில் பின்பற்றுவதாக அடுத்தவர் மீது விரல் நீட்டுவது நியாயமானதா? சிங்கள மக்கள் இவ்விடயத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டும்.
ஆண்மையை இழக்கச் செய்யும் மாத்திரைகளை முஸ்லிம் கடைகளில் உணவகத்தில் கலந்து சிங்களவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள் என்றும் 2050 ஆம் ஆண்டளவில் இலங்கை ஓர் இஸ்லாமிய நாடாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் சுமார் பத்து வருடங்களாக அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த சிலருக்கு, அவர்களாலேயே விளைவிக்கப்பட்ட அம்பாறை காசிம் ஹோட்டல் கடை எரிப்பு தக்க பதிலடி கொடுத்தது. அவர்கள் தோற்றுவித்த வதந்திகளுக்கு உறைப்பான பதிலையும் விளக்கத்தையும் அவர்களது இனத்தைச் சேர்ந்த சிங்கள டாக்டர்கள் வாயிலாகவும் அரச மருத்துவ அறிக்கைகள் ஊடாகவும், “ஆண்களுக்கு மாத்திரைகள் மூலமாக மலட்டுத்தன்மையை ஏற்படுத்த முடியாது” என்ற தீர்க்கமான செய்தியை அறிவித்து, இலங்கை முஸ்லிம்கள் மீதிருந்த பாரிய கறையொன்றைப் போக்கியுள்ளதோடு, நீண்டகாலப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியையும் வைத்தது. அப்போதைய சூழ்நிலையில் மிகுந்த துன்பமும் வேதனையும் எமக்கு ஏற்பட்டிருந்தாலும், அம்பாறை வன்முறை மூலம் முஸ்லிம் சமூகத்தின் மீதிருந்த பாரிய பழியொன்று நீங்கியுள்ளதை நினைக்கும்போது சற்று ஆறுதலாக உள்ளது.
இதுபோன்ற ஒரு சாதக நிலைமை திகன வன்முறையின் பின்னாலும் மறைந்திருக்கலாம். நாங்கள் முஸ்லிம்கள். எமது மார்க்கத்தின் சட்டதிட்டங்களை, சந்தேகங்களை மாற்றுமதத்தவர்களுக்கு சொல்லிக்குக் கொடுக்க வேண்டிய, தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பைச் சுமந்தவர்கள். நடைபெற்றுள்ள இத்தனை அழிப்புக்கும் துன்பத்திற்கும் குற்றச்சாட்டுக்கும் நாங்கள் கூறும் ‘தெளிவின்மை’தான் காரணமென்றால், அந்த சந்தேகங்களை (இஸ்லாத்தின் சந்தேகங்களை) தீர்த்து வைப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பமாகவும் இவ்விடயத்தை எடுத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் தெளிவு பெறும் சிலர் இஸ்லாத்தை விளங்கிக் கொள்ள நாட்டமுமிருக்கலாம். கல்வியில், அரசியலில், வியாபாரத்தில், மார்க்க விடயத்தில்... என்று எல்லாத் துறைகளிலுமே இன்று நாங்கள் வேறுபட்டு நிற்கிறோம். எம்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் களைவதில் இங்குள்ள எல்லாத் துறையினரின் உழைப்பும் தேவையென்பதால், தலைமைத்துவங்கள் ஒன்றுசேரும் ஆரோக்கிய சந்தர்ப்பமாகவும் இது அமையக்கூடும்!
இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு. இந்நாட்டில் வசிக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் வரலாறுகளைப் பார்த்தால் எல்லோரும் வந்தேறு குடிகள்தான். இந்த வரலாறுகளை யாரும் மறந்து பேச முடியாது. இந்நாட்டின் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு என்பது பிரிக்க முடியாத ஒரு பொருளாயிருந்தது. துரதிஷ்டவசமாக ஏற்பட்ட இனமுரண்பாடு இனங்களுக்கிடையில் பாரிய விரிசலையும் குரோதத்தையும் ஏற்படுத்தியதை மூவினத்தாரும் மானசீக ரீதியில் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
இந்நாட்டில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்குரித்தான உரிமைதான் ஏனைய சிறுபான்மை மக்களுக்கும் இருக்கிறது. பெரும்பான்மை இனத்தவர்கள் அந்நாட்டு சிறுபான்மை மக்களுக்கு சட்டத்திலும் சட்டத்திற்கு வெளியிலும் சலுகைகள் வழங்குவது சர்வதேசளவில் இலங்கைக்குத்தான் பெருமையென்பதை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும்.
Koththurotty katturai...!
ReplyDeleteSirupaanmai makkalukku oru muslimin thallupadi..!
Waarungal ewar solwazarku naangal adippaniwom...!
Iwarukku kaanbazu ellaam pai pisasu...!
Do not make people to compromise the matters of DEEN.
ReplyDeleteBut advising the people of the the points of flexibility withing the limit of Islamic teaching is welcome at this situation. However trying to guide the people toward give up everything is not acceptable.
It is upon us to make it clear to Buddhist and Hindu people about our belief and Way of life. If they understand it well.. they will respect for our modesty and Descent dress codes.
Also some groups of Muslims from long time.. used to trim beard and not wearing proper cloth and wearing below the ankle... Do not use this situation to justify your way of understanding practicing the DEEN.
சிறப்பான கட்டுரை. மதம் என்று சொல்லிக்கொண்டு என்னமோ செய்கின்றார்கள். இலங்கை இசுலாமியர்கள்
ReplyDeleteதெளிவைத் தரக்கூடிய கட்டுரை. எவ்வளவுதான் தெளிவாகச் சொன்னாலும் சிலரால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.
ReplyDeleteArticle contains some real problems we Muslims face today .We should encourage debate on this immediate problems face every nook corner by our innocent Muslims who live as among Singhalese brothers .
ReplyDeleteThere are several misconceptions and things adjusted to live peacefully with other groups.
If my memory is correct journalist Mr Ameen said we must have a print media to educate our people and wipe some misconceptions we and other brother's have.
In this article say about pills they said doubt cleared by doctors after Amparai incident . No Very recently I read an article regarding Ampara Digana incident. In that it was encouraging unrest everything misinformed . Even they have said contraceptive used
With Kottu is not scientifically proved .Answer for the number of misinformation we shoud have print media to reach all
Maarka vidayaththil compromise kidayathu.. Islam appadi kattruththaravum illai...
ReplyDeletethis is not a compromise. நாம் வாழ்வதுடன் மற்றவா்களுடன் சேர்ந்து வாழ பழகிக்ெகாள்வது பற்றியது.
ReplyDelete