Header Ads



பதவி கிடைத்தால், அதிசயங்களை நிகழ்த்த முடியுமென நான் நம்பவில்லை

இந்த அரசாங்கத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்வதே தனது ஒன்றே நோக்கம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்குத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

எமக்குப் பதவிகள் கிடைக்கப்பெற்றவுடன், அதிசயங்களை நிகழ்த்த முடியும் என நான் நம்பவில்லை. மீதமிருக்கும் ஒன்றரை வருடங்களில் எமக்கு பாரிய சவால்கள் காணப்படுகின்றன. குறித்த சவால்களை வெற்றிகொள்ள நாம் ஒரு கருத்தில் பயணிக்க வேண்டும். யார் பதவி வகித்தாலும், யார் பதவி வகிக்காவிட்டாலும், மக்கள் உணரக்கூடிய ஒரு மாற்றத்துடன் எம்மால் பயணிக்க முடியாவிடில், முன்நோக்கி செல்வது கடினம் என அவர் மேலும் தெரிவித்தார்.

-Dc-

No comments

Powered by Blogger.