Header Ads



ராஜிதவுக்கு ஐ.தே.க. பிரதித் தலைவர் பதவி - சஜித் எதிர்ப்பு

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, ஐ.தே.கவின் பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என கட்சியின் மறுசீரமைப்பு குழுக் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான சத்துர சேனாரத்ன ஆகியோர் ஐ.தே.கட்சியில் இணைய ஏற்கனவே விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் சாகல ரத்நாயக்க முன்வைத்துள்ள யோசனைக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.