Header Ads



ஜனாதிபதியின் நியமனத்துக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு

இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று -28- காலை அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியின் 01ம் இலக்க அறையில் இந்த கலந்துரையாடல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கடமையாற்றாத நபர்களை நேரடியாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்ப்பு நடவடிக்கை குறித்து இங்கு ஆராயப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த அதிகாரியொருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமித்திருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதியின் குறித்த நியமனத்துக்கு எதிர்ப்பை வௌிக்காட்டும் வகையிலேயே இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

No comments

Powered by Blogger.