Header Ads



செவ்விளநீர் விற்பனை சூடுப்பிடித்துள்ளது


பாறுக் ஷிஹான்

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில தினங்­க­ளாக வெயி­லின் தாக்­கம் அதி­க­ரித்­துள்­ளமையினால்   செவ்­வி­ள­நீ­ரின் விலை­யும் இம்­முறை உச்­சத்தை தொட்­டுள்­ளது. கடந்த ஆண்டு 70 - 80 ரூபா வரை­யில் விற்­ப­னை­யான செவ்­வி­ளநீர் தற்­போது 130 150 ரூபா வரை­யில் விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கின்­றது.

கடந்த வாரம் வடக்கு முழு­வ­தி­லும் மாலை நேரங்­க­ளில் மழை கொட்­டித் தீர்த்தி­ருந்­தது. இருப்­பி­னும் வழமை போன்று மார்ச் ஏப்ரல்  மாதத்­தில்  வெப்­பம் இப்­போதே ஆரம்­ப­மாகி விட்­டது. யாழ்ப்­பா­ணத்­தின் வெப்­ப­நிலை சரா­ச­ரி­யாக தற்­போது 28 பாகை செல்­சி­யஸ் வரை­யில் உள்­ளது. வெப்­பத்­துக்கு இத­மான இயற்­கைப் பான­மான செவ்­வி­ள­நீர் விற்­ப­னை­யும் அதி­க­ரித்­துள்­ளது.

ஒரு செவ்­வி­ள­நீ­ரின் விலை 130, 150 ரூபா வரை­யில் உள்­ளது. அதற்­குக் குறை­வான விலை­யில் இல்லை. கடந்த ஆண்டு 70, 80 ரூபா வரை­யில் விற்­ப­னை­யான செவ்­வி­ள­நீர் விலை எகி­றி­ய­தற்கு வரட்­சியே கார­ணம் என விற்­ப­னை­யா­ளர்­கள் தெரிவித்தனர்.

வரட்சி கார­ண­மாக உள்ளூர் (யாழ்ப்­பா­ணம் உள்­ளிட்ட வடக்கு) இள­நீர் கிடைப்­ப­தில்லை. குரு­நா­கலி­லி­ருந்தே கொண்டு வரப்­ப­டு­கின்­றது. அங்­கும் விலை அதி­கம். வாக­னங்­க­ளில் எடுத்து வந்து எங்­க­ளுக்­குத் தரு­கின்­றார்­கள். 100 – 110 ரூபா­வுக்­குத்­தான் வழங்­கு­கின்­றார்­கள். அதற்குக் குறைந்த விலை­யில் இல்லை. நாங்­கள் லாபம் வைத்து விற்­கின்­றோம். ஒரு நாளைக்கு சரா­ச­ரி­யாக 150, 200 இள­நீர் வரை­யில் விற்­ப­னை­யா­கின்­றது’ என்று வியா­பாரி ஒரு­வர் குறிப்­பிட்­டார்.


No comments

Powered by Blogger.