Header Ads



அல்லாஹ்வின் அற்புதப் படைப்பு "காகம்"

-அஷ்பாக் மஸ்ஹார்-       

இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்திலும் பற்பல வியக்கத்தக்க அம்சங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இறைவன் ஒருவன் என்பதையும் அவனின் ஆற்றல்களையுமே பிரதி பலிக்கின்றன.

அவ்வாறு இவ்வுலகில் நாம் கண்டு சலித்துப் போன இறைவனின் அற்புதப் படைப்பே காகம். அன்றாடம் நம் கண்களுக்கு பல தடவை தென்படும் காகங்கள் பற்றி துளியும் கூட அலட்டிக் கொள்வது இல்லை என்றிருந்தாலும் இதற்கு இறைவன் எண்ணற்ற ஆற்புதங்களை எற்படுத்தியுள்ளான்.

முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு புதல்வர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவின் விளைவாக ஹாபில் என்பரை காபில் என்பவர் கொன்றுவிடுகிறார். பின்பு தன் செயலுக்காக கைஷேதப்பட்டு தன் சகோதரனின் உடம்பை என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டு இருந்த வேளை இறைவன் இரு காகங்களை அனுப்பி ஒன்றோடொன்று சண்டை பிடிக்க வைத்து அவற்றில் ஒன்று மற்றதை கொல்ல வைத்து பின்பு பூமியில் அழகிய முறையில் ஒரு குழியை தோண்டி தன் சஹாவை புதைத்துக்காட்டப்பட்டு வைக்கவே அதன் படி காபில் என்ற ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனும் தன் சகோதரனை இப்புவியில் அடக்கம் செய்தார்.

மனித குலத்துக்கு அடக்கம் செய்யும் முறையை கற்றுக் கொடுக்க இக்காகத்தையே இறைவன் தெரிவு செய்தான் என்பதனூடாக இதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். இவ்வாறானா ஒரு செயற்பாட்டின் மூலம் மரணித்து அழுக்கடையும் பிணங்களால் பரவும் எண்ணற்ற பாரிய நோய்கள் தடுக்கப்படும் மிகச் சிறந்த வழியாகவே இது காணப்படுகின்றது.

காகங்கள் பற்றி சில விஞ்ஞானத் தகவல்கள்

சாதாரணமாக நமக்கு காகம் என்றால் உடனே அது ஓர் கருப்பு நிறம், அது தமக்கே உரிய பானியில் கரையும், அதே போன்று அது புத்தி கூர்மையான ஒரு பறவை என்றுதான் தெரிந்திருக்கின்றோம்.

ஆனாலும் அது மாத்திரமல்ல நாம் காகத்தை பற்றி அறிந்திருக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. அதாவது இன்று உலகில் 35 வகையான காகங்கள் உயிர் வாழ்கின்றன. காகங்கள்  இறைச்சியை அதிகம் பிரியம் காட்டக்கூடியவைகள்.

அது மற்றுமின்றி காகங்களை பொருத்தவரையில் அதனுடைய இனத்தில் யாராவது மரணித்து விடும் போது அதை அடக்கம் செய்ய இன்னும் பல தங்களது சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தமக்கே உரிய சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. வீதியோரங்களில் பல பிராணிகள் இறந்து சீரலிவதை நாம் காணலாம். ஆனாலும் இந்த காகங்களைப் பொருத்தவரையில் வீதியொரங்களில் இறந்து கிடப்பது மிகவும் அறிது.
ஏன் என்று ஆராய்ந்தால் இந்தக் காகங்கள் தன் இனத்தில் எதவும் வீதியோரங்களில் சீரழிவதையும் விரும்பமாட்டாதாம்.

அது மட்டுமின்றி இறந்த காகத்தை வேட்டைப் பிராணிகள் கொண்டு செல்லாமல் இருக்கவும், அதிலிருந்து வெளிவரும் வாடை சூழலை மாசுபடுத்தாமல் இருக்கவும், அதன் துர்நாற்றம் மக்களை கஷ்டப்படுத்தாமல் இருக்கவும் இறந்த காகத்தை இன்னொரு காகம் தனது இரு கால்களாலும், அலகாலும் ஒரு குழியை தோண்டி அதில் வைத்து அதன் மீது மண்ணைப் போட்டு நிலத்தை சமப்படுத்தி அந்த மரணித்த காகத்தை கண்ணியப்படுத்துமாம்.

ஆம் இதனை நாம் இன்று காண்கிறோம் தானே. ஒரு காகம் இறந்து விட்டது என்றால் எத்தனையோ காகங்கள் அதனைச் சுற்றி நிற்கும். நாம் அதை நெருங்கினால் அவை எம்மை கொத்த வருமல்லவா?

நவீன ஆய்வாளர்கள் காகத்தைப் பற்றி குறிப்பிடுகையில் பறவைகளில் அதிக புத்திகூர்மையான, அதிக தந்திரமுள்ள பறவை காகம் தான் எனக் கூறகின்றார்கள். ஏனெனில் அவைகள் உண்ணக் கூடிய உணவுகளில் அதிகமான பகுதிகள் தன் அறிவு சார்ந்தவைகளுக்குத் தான் செலவாகுவதோடு அதில் ஒரு சிறு பகுதிதான் அதன் உடல் வளரச்சிக்கு செலவாகின்றது. அத்தோடு பெரும்பாலும் ஏனைய பறவைகளை விட உடல் ரீதியாக பெரிதாகவும் காணப்படுகின்றது.

இவைகள் எல்லாவற்றை விடவும் மிக மிக ஆச்சரியத்துக்குள்ள ஒரு விடயம் என்னவென்றால் மனிதர்கள் ஒரு குற்றத்தை செய்தார்கள் என்றால் அதற்கான தண்டனைகளை கொடுப்பது போல அந்தக் காகங்களுக்கிடையில் நடக்கின்ற ஒவ்வொரு குற்றத்திற்கும் பற்பல தண்டனைகளை வைத்துள்ளதை பார்க்கலாம். அவைகள் அவற்றுக்குள்ளே ஒரு பெரிய அரசாங்கமே நடத்துகின்றதாம்.

அதாவது காகங்களில் ஒரு காகம் ஏதாவது ஒரு குற்றதை செய்தால் ஆரம்பமாக அனைத்துக் காகங்களையும் விவசாய நிலயத்துக்கு அல்லது விசாலமான ஒரு நிலப்பரப்பிற்கு அழைக்கப்பட்டு குற்றம் செய்த காகங்கள் முன் நிறுத்தப்படுமாம். சற்று சிந்தித்துப் பாருங்கள் அவைகளுக்கு மத்தியில் எப்படி இருக்கும் என்பதை அதவும் குற்றவாளிக் காகத்தை எப்படிக் கொண்டு வரப்படும் தெரியுமா? பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அதை கொண்டு வரப்படுமாம்.

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்ன தெரியுமா? அந்தக் குற்றவாளிக் காகம் எப்படி தெரியுமா இருக்கும்? தன் தலையை கீழே தொங்கவிட்டதாகவும் தன் இரு சிறகுகளையும் நிலத்தில் வைத்த வண்ணம் இருக்குமாம். இன்னும் விசாரனையின் போது எதையும் பேசவும் மாட்டாதாம். பின்பு அது செய்த குற்றத்திற்காக தண்டனை வழங்கப்படுமாம்.

சில குற்றங்களும் தண்டனைகளும் :

1) ஒரு காகம் சிறு காகத்தின் உணவை பரித்தால் ஏனைய காகங்கள் அந்தக்காகத்தை பிடித்து அதன் அனைத்து சிறகுகளையும் கழட்டிவிடுமாம், பின் அந்தக் காகம் எப்படி பிறந்த நேரத்தில் இருந்ததோ அதே போன்று சிறகுகள் இல்லாத குஞ்சைப் போன்று மாறுமாம்.

2) இன்னுமொரு பறவையுடைய கூட்டை உடைத்தால் எல்லாக் காகங்களும் சேர்ந்து அந்தக்காகத்தை பிடித்து புதியதொரு கூட்டை கட்டிக் கொடுக்க வைக்குமாம். அதற்கு இந்தக் காகம் மறுத்தால் தனது கூட்டத்திலிருந்து அதை ஒதுக்கி விடுகின்றதாம்.

3) ஒரு பெண் காகத்தை களவாடிச் சென்றால் ஏனைய காகங்கள் தமது அலகுகளால் கொத்தி கொத்தி அதை கொண்டுவிடுமாம். பின்பு அது எமது சமூகத்தையே இழிவு படுத்திவிட்டதே என்று இதை கடலில் அல்லது குப்பை கூலங்களில் வீசுமா என்று பார்த்தால் ஒரு போதும் அவைகள் அப்படிச் செய்யவேமாட்டாதாம். அவைகள் கண்ணியமான முறையில் ஒரு குழியைத் தோண்டி அதை அடக்கம் செய்யுமாம்.

அதே போன்று தான் காகத்தின் சிறகினால் தனது முழு உடம்பையும் மூடிக் கொள்ள முடியுமாம். வானில் பறக்கும் போது அதிக வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் அல்லாஹ் அதற்கு வழங்கியுள்ளான். வானில் மிக தூரத்தில் இருந்து கீழே நிலத்தில் உள்ளவற்றைப்பார்க்கக்கூடிய கூரிய பார்வையும் இந்தக் காகத்திற்கு உள்ளதாம். இப்படி பல அற்புதங்களை கொண்ட ஒரு பிராணியாகத்தான் இந்தக்காகம் இருந்து கொண்டிருக்கின்றது.

அல்லாஹ் குர்ஆனில் நல்லடியார்களின் ஒரு முக்கிய பண்பாக பறைசாட்டுகிறான். ‘இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை (என்று கூறுவார்கள்) இறைவா நீ தூய்மையானவன். எம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றுவாயாக (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் : ஆலு இம்ரான் : 111) எனவே இது போன்ற இறைவனின் படைப்புகளின் அற்புதங்களை அறிவதன் மூலம் இறைவனின் வல்லமைகளையும் ஆற்றல்களையும் அறிய முயற்சிப்போமாக.

2 comments:

  1. காகத்துக்கு இவ்வளவு புத்தி கூர்மையா..

    ReplyDelete
  2. காகத்திடம் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் வந்தால் போதும் நிம்மதியாக வால முடியும்

    ReplyDelete

Powered by Blogger.