கொழும்புத் துறைமுகத்தில் 3 போர்க் கப்பல்கள் (படங்கள்)
மூன்று நாள் பயணமாக தாய்லாந்து போர்க் கப்பல்கள் மூன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
நேற்று கொழும்பை வந்தடைந்த இக்கப்பல்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் இலங்கையில் தரித்து நிற்கும் என துறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கப்பல்களில் தாய்லாந்து – இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படை அதிகாரிகள் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எனினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வத் தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment