பள்ளிவாசலுக்கு சேதம் விளைவித்த 2 இராணுவத்தினரே கைது
கண்டிக் கலவரத்தின் போது பூஜாப்பிட்டி, அம்பதென்ன முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் இராணுவ கோப்ரல் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் இன்று (09) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அதிகாரியுமான சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த கோப்ரல் இருவரும் தற்போது இராணுவத்தில் சேவையாற்றிக் கொண்டிருப்பவர்கள் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு கோப்ரல் புத்தளம் சின்னவில்லு வத்தையிலுள்ள 143 ஆவது படையணி தலைமையகத்தில் கடமையில் உள்ளவர் எனவும், மற்றவர் இயந்திர துறை படையணியில் கெகிராவ தம்புலுபல்வில பயிற்சிப் பாடசாலையில் சேவையாற்றும் ஒருவர் எனவும் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர கூறியுள்ளார்.
இந்த இருவரும் அம்பதென்ன கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டுள்ள 10 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் சீ.சீ.டி.வி. காட்சிகள் என்பவற்றை வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்
please arrest that swanakka also
ReplyDelete