Header Ads



16 பேர் தொடர்பிலான, இரகசியங்கள் வெளியிடப்படும்

அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ள 16 பேரினது இரகசியங்களையும் வெளியிட தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளியேறிச் சென்ற அனைவரும் எம் மீது வெறுப்பை உமிழும் செயற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அடுத்த வாரத்தில் இருந்து அவர்களுக்கு பதில் வழங்கும் பணிகள் ஆரம்பமாகும்.

அந்த வகையில் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் தொடர்பிலான இரகசியங்களை வெளியிடப்படும் எனவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவை பணி நீக்குமாறு பதவிகளை இராஜினாமா செய்துள்ள 16 பேரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.