Header Ads



ரணிலை வீட்டுக்கு அனுப்ப, மைத்திரியின் உதவி கேட்கும் மகிந்த டீம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர்கள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு தரப்பினர்களும் ஆதரவு வழங்குவது அவசியமானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு ஜனாதிபதி தனக்கு ஆதரவாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் உத்தரவிடுவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.