Header Ads



எனது நகர்வில் மாற்றமில்லை - ஜனாதிபதி

ஊழல் மோச­டிக்கு எதி­ரான எனது கொள்­கையில் எவ்­வித மாற்­றமும் இல்லை.  மக்­க­ளுக்குத் தேவை­யான அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டங்­களை மோச­டிகள் இடம்­பெ­றாத வகையில் உரிய முறை­யிலும் வெளிப்­படைத் தன்­மை­யு­டனும் நடை­மு­றைப்­ப­டுத்­துவேன் என  ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

பொலன்­ன­றுவை கிரித்­தலே குடி­யேற்­றத்தில் உள்ள கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தில்   நேற்று   புதிய வகுப்­பறை கட்­டி­டத்தை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி  இவ்வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில். 

”எழுச்­சி­பெறும் பொலன்­ன­றுவை” மாவட்ட அபி­வி­ருத்தி நிகழ்ச்சித் திட்­டத்தின் கீழ் 06 மில்­லியன் ரூபா செலவில் இந்த புதிய வகுப்­பறை கட்­டிடம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது   நாட்டின் விவ­சாய சமூ­கத்­திற்கு முன்­னைய எந்த அர­சாங்­கமும் மேற்­கொள்­ளாத நிகழ்ச்சித் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி உலர் வல­யத்தில் 2400 குளங்­களை அபி­வி­ருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம் இவ்­வ­ருடம் ஆரம்­பிக்­கப்­படும்.  இதன் கீழ் பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் மட்டும் 123 குளங்கள் புன­ர­மைக்­கப்­பட்டு வரு­கின்­றது.  கடந்த  60 வரு­டங்­க­ளுக்கும் மேலாக மாவட்­டத்தில் உள்ள மக்கள் முகங்­கொ­டுத்த நீர் தொடர்­பான பிரச்­சி­னைகள் இவ்­வ­ருட இறு­திக்குள் நிரந்­த­ர­மாக தீர்த்­து­வைக்­கப்­படும். 

பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் உள்ள 240 பாட­சா­லை­களில் 142 பாட­சா­லை­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட புதிய வகுப்­பறைக் கட்­டி­டங்­களை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்­வு­க­ளுக்கு  தனக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.  கல்­வித்­து­றைக்கு தேவை­யான வச­தி­களை வழங்­கு­வ­தைப்­போன்று பரீட்­சை­களில் மாண­வர்கள் சிறந்த பெறு­பே­று­களைப் பெற்­றுக்­கொள்­வது அவ­சி­ய­மாகும். 

பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் உள்ள பாட­சாலை மாண­வர்­களின் பரீட்சை பெறு­பே­று­களில் உள்ள பல­வீ­னங்­களை இனங்­கண்டு மாண­வர்கள் சிறந்த பெறு­பே­று­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான நிகழ்ச்சித் திட்­ட­மொன்றை பாட­சாலை அதி­பர்கள் மற்றும் கல்வி அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ளேன். எவ்­வாறு இருப்­பினும் இந்த நாட்டில் ஊழல் இல்­லாத சமு­தாயம் ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளையே நான் முன்­னெ­டுத்து வரு­கின்றேன். எனினும் ஊழல் குற்­றங்­களை ஒழிக்கும் எனது வேலைத்­­திட்­டங்­களை நான்  ஒரு­போதும் கைவி­டப்­போ­வ­தில்லை. ஊழல் மோசடிக்கு எதிரான எனது கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.   மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மோசடிகள் இடம்பெறாத வகையில் உரிய முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத் துவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

3 comments:

  1. Implement Law and Order before do any baila.......

    ReplyDelete
  2. Stop singing here and their and show in actions ,
    We are not fools

    ReplyDelete
  3. You always say only... Kata witharai...
    No fruitful decision.
    All are Sri Lankan, but you look at them as your enemies.
    If any unlawful incident happen use your power to stop...
    No need to tell you any one becz your have given already approval by our votes.

    ReplyDelete

Powered by Blogger.