Header Ads



இலங்கையில் மிகப்பெரிய ஊழல், கிரிக்கெட் வீரர்களுக்கும் தொடர்பு - அம்பலமாக்கவுள்ள ரஞ்சன்


இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல் குறித்த தகவல்களை தாம் வெளியிடவுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஊழல் மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடியைக் காட்டிலும் பலமடங்கு பெரியது. மத்திய வங்கியின் ஊழல் மோசடி இலங்கை ரூபாவிலேயே இடம்பெற்றது.

ஆனால் இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடி அமெரிக்க டொலர்களில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த விபரங்களை இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் சிலரும் அதிகாரிகள் சிலரும் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் வைத்து அவர் இந்த தகவல்களை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.