சிங்களக் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம், கடைகளில் வாளேந்திய சிங்கக்கொடி பறக்கிறது
கண்டி- கட்டுகஸ்தோட்டையில் சிங்களக் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் வாணிப நிலையங்களில், பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
கட்டுகஸ்தோட்டை, உகுரெசபிட்டிய பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வாணிப நிலையங்களின் மீது, இன்று காலை 11.30 மணிக்கும் பிற்பகல் 1 மணிக்கும் இடையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன.
தீயிட்டு எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் வெதுப்பகத்தின் முன்பாக, சிங்களக் காடையர்கள், சிங்கக்கொடியையும் பறக்கவிட்டுள்ளனர்.
சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகளால் பயன்படுத்தப்படும், வாளேந்திய சிங்கம் மாத்திரம் இடம்பெற்றுள்ள கொடியே பறக்கவிடப்பட்டுள்ளது.
The government will arrest this group and gang,......?
ReplyDeletethere is no government in Sri lanka
ReplyDelete