Header Ads



ஐ.தே.க.யுடன் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது - ஜோன் சென­வி­ரட்ன

ஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளுடன் இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.  இந்த விடயம் கடந்த  மூன்று வரு­டங்­களில் நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. தொடர்ந்து  ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­துடன் பய­ணிக்க முடி­யாது. 

எனவே  விரைவில்   தீர்க்­க­மான முடிவு ஒன்றை  சிறி­லங்கா  சுதந்­திரக் கட்சி எடுக்கும் என்று  அக்­கட்­சியின் சிரேஷ்ட உப தலை­வரும் அமைச்­ச­ரு­மான ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார்.  

விரைவில் இது தொடர்பில் மாற்று வழி ஒன்றை ஆராய்வோம்.    சுதந்­திரக் கட்­சியின் தனி அர­சாங்­கத்தை அமைக்கும் செயற்­பா­டு­களில் பின்­ன­டைவு ஏற்­பட்­டி­ருந்­தாலும்  எதிர்­கா­லத்தில்  அது குறித்து ஆரா­ய­வேண்­டிய  சூழல் ஏற்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

அமைச்­ச­ரவை மாற்றம் ஏற்­பட்­டுள்ள போதிலும் சுதந்­திரக் கட்­சி­யினர் இன்னும்  அமைச்­ச­ரவை மாற்­றத்தில் உள்­வாங்­காமை குறித்து  விப­ரிக்­கை­யி­லேயே  அவர்  மேற்­கண்­ட­வாறு கூறினார். 

இது தொடர்பில் சிறி­லங்கா  சுதந்­திரக் கட்­சியின்   சிரேஷ்ட உப தலை­வரும் அமைச்­ச­ரு­மான ஜோன் சென­வி­ரட்ன  மேலும் குறிப்­பி­டு­கையில் 

அமைச்­ச­ரவை மாற்­றத்தில் நாங்கள் இன்னும் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  இது­வரை அதற்­கான  அழைப்பை விடுக்­க­வில்லை.    எவ்­வா­றெ­னினும்   ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது என்­பது  தொடர்ந்து சாத்­தி­ய­மா­காது என்றே எங்­க­ளுக்கு தோன்­று­கின்­றது. 

அதா­வது    பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் பய­ணிக்க முடி­யாது என்று   கூறும் உறுப்­பி­னர்­களும் உள்­ளனர். ஆனால்  எம்மை பொறுத்­த­வ­ரையில்    பிர­தமர் என்­பவர் ஒரு   மனிதன் மட்­டு­மே­யாவார். ஆனால்    ஐக்­கிய தேசிய கட்­சியின் பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளுடன் இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.   ஐக்­கிய தேசிய  இலங்­கைக்கு பொருத்­த­மான பொரு­ளா­தார கொள்­கை­களை  கொண்­டி­ருக்­க­வில்லை. 

குறிப்­பாக    ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது  அமெ­ரிக்கா ஜேர்மன் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளுக்கு  பொருத்­த­மான   பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளையே கொண்­டுள்­ளது.  அந்த கொள்­கைகள்  இலங்­கைக்கு பொருத்­த­மாக அமை­யாது. இலங்­கை­யா­னது   தேசிய    பொரு­ளா­தா­ரத்தை   அடிப்­ப­டை­யா­கக்­கொண்­டது.    எனவே நாம்  அத­னைத்தான்      ஊக்­கு­விக்­க­வேண்டும்.  

ஆனால் ஐக்­கிய தேசிய கட்சி  கடந்த   மூன்று வரு­டங்­க­ளாக பொருத்­த­மற்ற பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளையே முன்­னெ­டுத்து வந்­துள்­ளது.   அது வெற்­றி­ய­டை­ய­வில்லை என்­பது நிரூ­ப­ண­மா­கின்­றது.   

அதனால்  தொடர்ந்து  ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­துடன் பய­ணிக்க முடி­யாது. எனவே  விரைவில்   தீர்க்­க­மான முடிவு ஒன்றை  சிறி­லங்கா  சுதந்­திரக் கட்சி எடுக்கும். இவ்­வாறு   ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­துக்கு எதிர்ப்பை தெரி­வித்­துக்­கொண்டு சுதந்­திரக் கட்­சி­யினால்   தொடர்ந்து  அதே அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்க முடி­யாது.  அது சாத்­தி­ய­மற்ற நகர்­வா­கவே அமையும்.  

அதனால்  விரைவில்  ஒரு தீர்க்­க­மான முடிவை  சுதந்­திரக் கட்சி எடுக்­க­வேண்­டி­யேற்­படும். விரைவில் இது தொடர்பில் மாற்று வழி ஒன்றை ஆராய்வோம்.  தற்­போ­தைய நிலை­மையில்   சுதந்­திரக் கட்­சியின் தனி அர­சாங்­கத்தை அமைக்கும் செயற்­பா­டு­களில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும்  எதிர்காலத்தில்  அது குறித்து ஆராயவேண்டிய  சூழல் ஏற்படும். 

அவ்வாறு  மாற்று ஏற்பாடு ஒன்று குறித்து ஆராயாமல்   தொடர்ந்து இவ்வாறு பயணிக்க முடியாது.  எனவே சுதந்திரக் கட்சி விரைந்து  உறுதியான மற்றும் தீர்க்கமான  முடிவு ஒன்றை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது என்றார். 

No comments

Powered by Blogger.