Header Ads



"ராஜித, அர்ஜூன, சம்பிக்க இவர்களும், பொருத்தமான அமைச்சர்களே"


சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்றால், அந்த அமைச்சு பதவிக்கு பொருத்தமான மூன்று அமைச்சர்கள் இருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் கடுமையான தேவை இந்த மூன்று அமைச்சர்களுக்கும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகிய அமைச்சர்களில் ஒருவரிடம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. சட்டம் ஒழுங்கு அமைச்சு சம்பிக்கைக்கா??? மனோவுக்கு என்ன பேதலித்து போய் விட்டதா??

    ReplyDelete
  2. சட்டம் ஒழுங்கு அமைச்சு சம்பிக்கைக்கா??? மனோவுக்கு என்ன பேதலித்து போய் விட்டதா??

    ReplyDelete

Powered by Blogger.