Header Ads



முஸ்லிம்களுக்கெதிரான இனாவாத தீ, மஹிந்தவை கொண்டே அனைக்கப்பட வேண்டும்

யுத்த நிறைவுக்குப் பின்னர் குறிவைத்து தாக்கப்படுகின்ற இனமாக இலங்கை முஸ்லிம்கள் காணப்படுகின்றர். குறிப்பாக இத் தாக்குதல்களின் ஆரம்பம் முன்னைய சனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் தான் ஆரம்பமானது என்ற உண்மை தம்புள்ளை மஹியங்கனை அளுத்கமை வரையான முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இருந்து புலனாகியது. 

அவ்வாறான தாக்குதல்களின் பின்னால் சனாதிபதி மஹிந்த செயற்பட்டாரோ இல்லையோ தெரியாது ஆனால் அதன் பின்னர் இடம் பெற்ற சனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லீம்களும் மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்தமைக்கு காரணம் அனைத்து தாக்குதல்களும் அவரது காலத்தில் இடம்பெற்றன என்ற ஒரே காரணமாகும். 

அது மாத்திரமின்றி அடுத்து வந்த 2016 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட மஹிந்தவுக்கு ஆதரவளித்தார்கள் என்ற ஒரே காரணத்தில் அதாவுல்லா ஹிஸ்புல்லா போன்ற பெரும் சேவையாற்றிய தலைவர்களுக்கெதிராக வாக்களித்த வரலாறும் ஏட்டில் எழுதப்பட்டிருக்கிறது. உண்மையில் முஸ்லிம் மக்கள் மஹிந்தவை தோற்கடிக்க வாக்களித்தது உருவாக்கப்படுகின்ற மைத்திரி தலைமையிலான அரசாங்கம் இனப் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையிலாகும். 

ஆனால் இன்று அந்நம்பிக்கை அவநம்பிக்கை யான சோகம் நடந்தேரி யிருக்கிறது. ஆட்சி மாற்றம் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதற்கான தீர்வு அல்ல என்ற உண்மையினை இறைவன் மறைமுகமாக படம்பிடித்து காட்டியிருக்கிறான்.  

இனப்பிரச்சினைகான தீர்வு பெற்றுத்தருகின்ற திரானி இவ் நல்லாட்சி அரசாங்கத்திற்கு இல்லை என்ற உண்மைக்கு பல நாட்களாக தேடப்பட்டு தானாக சரனடைந்த இனவாத தேரர் ஒருவரை அதே நாளே விடுதலை செய்தமை, பிரதமர் ரனிலை பொ....ன் எனக்கூறிய அதே தேரருக்கு எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமை, யுத்தம் நிறைவு செய்யுமளவிற்கு பலமான புலனாய்வுத்துறையை கொண்ட அரசாங்கத்துக்கு தோற்றுவிக்கப்பட்டிருக்கின்ற இனவாத அமைப்புக்களையோ அவர்களது சதிகளையோ அறியும் ஆற்றல் காணப்படாமை, இனவாதம் கக்குகின்ற தயா கமகே, சம்பிக்க ரன வக்க போன்ற அரசியல் வாதிகளுக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம், இன வன்முறைகளுடன் தொடர்புடைய அரசியல் வாதிகளை வெளிக்காட்ட முற்படாமை போன்ற காரணிகளை அடிப்படையாக வைத்து விளங்கிக் கொள்ளலாம். 

இவற்றுக்கெள்ளாம் காரணம் இவ் வரசாங்கமானது முற்று முழுதாக சிறுபான்மை இனத்தின் ஆதரவோடு நிறுவப்பட்டமையாகும். எனவேதான் இவர்களால் பெரும்பான்மை இனத்திற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. 

ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஓர் பெரும்பான்மை ஆதரவை பெற்ற தலைவர் என்பதையே நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சுட்டி நிற்கின்றன. அதுமாத்திரமின்றி தமீழ் மக்கள் கோருகின்ற சமஷ்டியினை மஹிந்த வழங்கினால் கூட அவருக்கெதிராக எவ் பெரும்பான்மை சமூகமும் கை நீட்டியிருக்காது என்று கூறுமளவிற்கு மஹிந்த பெரும்பான்மை மக்களின் ஆரவை பெற்றவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

இனவாத சக்திகளை மஹிந்த கூண்டில் அடைத்தால் கேள்வி கேற்க யாரும் முன்வர மாட்டார்கள் ஆனால் நல்லாட்சி அரசுக்கு அவ்வாறான அதிகார செல்வாக்கு இல்லை என்பது வெளிப்படை. எனவே ஆட்சி மாற்றத்திற்கு எவ்வாறு ரனிலும் மைத்திரியும் சிறுபான்மை மக்களை துரும்பாக பயன்படுத்தினார்களோ முஸ்லிம்களாகிய நாம் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்காக மஹிந்த ராஜபக்ஷவை துரும்பாக பயன்படுத்த வேண்டிய காலம் உருவாகியிருக்கிறது. 

எனவே மரக்கட்சி அரசியல் சானக்கியம், மயில்கட்சி அரசியல் சாமர்த்தியம் பொருந்திய தலைவர்கள் முஸ்லிம் மக்களின் குரலாக அரசாங்கத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே அத்தலைவர்கள் மஹிந்தவை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திட்டம் தீட்டி இருப்பார்கள் என்பதும் எமக்கு தெரியும். 

எனவே உங்களது திட்டங்களில் மஹிந்தவைக் கொண்டே இனவாத தீயினை அனைக்கின்ற அஜன்டாக்களையும் சேர்த்துக்கு கொள்ளுங்கள் என்ற கோரிக்கையினையும் முன்வைக்கின்றோம்.

Sifas Nazar 

4 comments:

  1. "The Muslim Voice" believes what Brother Sifas Nazar has written is absolutely correct in the present context of the political senario in Sri Lanka "viz-a-viz" the Sri Lanka Muslims and the Majority community and Buddhist clergy. Brother Sifas Nazar has made a very good political communication analysis of the situation and has proposed the best political "STRATEGY" that we should adopt for the future, Insha Allah. If the Muslim MP's will support the JO no-confidence mation against the Prime Minister Ranil Wickremesinghe in parliament on April the 4th., 2018, this will be a good start, Insha Allah. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and it's Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government, has been betrayed and dumped in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered with out a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela, Insha Allah.
    Noor Nizam.
    Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. unmayil avarukkuthan iyalum pol therihirethu

    ReplyDelete
  3. unmayil avarukkuthan iyalum pol therihirethu

    ReplyDelete
  4. முஸ்லிம் மக்கள் மேலெழுந்தவாரியாக சிந்திப்பது கவலை தருகிறது. முஸ்லிம்களை சூழ்ந்துள்ள குழப்ப நிலையை கழையவேண்டும். முஸ்லிம் தலைவர்களும் இளைஞர்களும் சிவில்சமூகமும் சந்திப்புகளை நடத்தி நேர்காணணல்கள் கருத்தரங்குகள் ஆய்வு கட்டுரைகள் விவாதங்களை நிகழ்த்தி தெளிவு படவேண்டும். தமிழர்கலைப்பொறுத்து மகிந்த பதவிக்கு வந்தால் 1987 போல சர்வதேச சமூகம் தலையிட்டு இணைந்த வடகிழக்கு அடிப்படையிலான தீர்வை மீண்டும் அமுலாக்கும் சூழல் உருவாகலாம்.

    ReplyDelete

Powered by Blogger.